துறையூர்
திருச்சி மாவட்டம், துறையூர் வட்டாட்சியர் அலுவலகத்தில் நேற்று முன்தினம் (மே -20) 2024 – 2025ஆம் ஆண்டுக்கான 1434 ஆம் பசலி வருவாய் தீர்ப்பாயம் (ஜமாபந்தி) நடைபெற்றது.திருச்சி மாவட்ட வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு அலுவலர் ஸ்ரீராம் தலைமையில் நடைபெற்ற முதல் நாள் ஜமாபந்தி நிகழ்வில் வட்டாட்சியர் மோகன், வட்ட சார் துணை ஆய்வாளர் வெங்கடாசலம் ஆகியோர் முன்னிலை வகித்தார்.ஜமாபந்தி நடந்த முதல் நாளில் நத்தம் பட்டா மாற்றம், நில அளவை, முதியோர் உதவித்தொகை, வேளாண்மை உள்ளிட்ட கோரிக்கைகள் வேண்டி பொது மக்கள் 69 மனுக்கள் அளித்திருந்தனர்.
இதில் 34 மனுக்கள் ஏற்கப்பட்டது .5 மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டது. 30 மனுக்கள் விசாரணையில் உள்ளது.இதில் 6 நபர்களுக்கு உடனடி பட்டா வழங்கப்பட்டது.
முதல் நாள் கொப்பம்பட்டி வருவாய் கிராமங்களை சேர்ந்த தளுகை, வைரிசெட்டிப்பாளையம், பசலிக்கோம்பை, சூக்கலாம்பட்டி கோம்பை, சங்கம்பட்டி கோம்பை, கொப்பமாபுரி, காரப்புடையான்பட்டி, கொப்பம்பட்டி, ஓசரப்பள்ளி, சோபனபுரம், பச்சமலை தென்பறநாடு ஆகிய ஊர்களைச் சேர்ந்த பொதுமக்கள் கலந்து கொண்டு தங்களது கோரிக்கை மனுக்களை அளித்தனர்.
இந்நிகழ்வில் வட்ட சார் துணை ஆய்வாளர் வெங்கடாசலம், தலைமையிடத்து துணை வட்டாட்சியர் ஐயப்பன்,வட்ட வழங்கல் அலுவலர் முத்து, மண்டல துணை வட்டாட்சியர்கள் விஜய், ராஜேந்திரன், கொப்பம்பட்டி வருவாய் ஆய்வாளர் கிரிஜா மற்றும் தளுகை, வைரிசெட்டிபாளையம், கொப்பமாபுரி, காரபுடையான்பட்டி , கொப்பம்பட்டி,சோபனபுரம், தென்புறநாடு கிராம நிர்வாக அலுவலர்கள்
மற்றும் அலுவலக பணியாளர்கள் கலந்து கொண்டனர்.
வெ.நாகராஜீ
திருச்சி மாவட்ட செய்தியாளர்