சீர்காழி சட்டைநாதர் சுவாமி கோயிலில் தெப்போற்சவம் திரளான பக்தர்கள் வழிபாடு.

மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழியில் தருமபுர ஆதீனத்துக்கு சொந்தமான ஸ்ரீ சட்டைநாதர் சுவாமி கோவில் அமைந்துள்ளது. இங்கு திருநிலை நாயகி அம்பாள் சமேத பிரம்மபுரீஸ்வரர், சட்டை நாதர், தோனியப்பர் தனி சன்னதியில் அருள்பாலித்து வருகின்றனர் .சித்திரை பிரமோற்சவம் திருவிழா கடந்த 1ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது.

முக்கிய திருவிழா திருமுலைப்பால், சகோபுரம், திருக்கல்யாணம் உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடைபெற்றது. உற்சவத்தில் 13ம் நாள் தெப்ப உற்சவம் வெகு விமர்சையாக நடைபெற்றது.

சிறப்பு அலங்காரத்தில் வள்ளி தெய்வானை உடனாகிய முருகப்பெருமான் தெப்பத்தில் எழுந்தருளி மகா தீபாரதனை காண்பிக்கப்பட்டது.அதனை தொடர்ந்து தீர்த்த குளத்தில் மூன்று முறை தெப்பம் வலம் வந்தது திரளான பக்தர்கள் பங்கேற்று தெப்போற்சவ விழாவில் சுவாமி அம்பாளை தரிசனம் மேற்கொண்டனர்.

Share this to your Friends

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *