இராமநாதபுரம் மாவட்டம், கமுதி அருகேயுள்ள இராமசாமிபட்டியில் வடக்கு ஒன்றியம் சார்பில் திமுக அரசின் நான்கு ஆண்டு சாதனை விளக்க பொதுக்கூட்டம் நடைபெற்றது.
இக்கூட்டத்திற்கு வடக்கு ஒன்றிய செயலாளர் வாசுதேவன் தலைமை
தாங்கி அனைவரையும் வரவேற்று பேசினார்.

மேலும் திமுக அரசின் நான்கு ஆண்டு சாதனை திட்டங்களான நான்முதல்வன் திட்டம், மகளிர் உரிமைத்தொகை, மகளிருக்கு இலவச பேருந்து திட்டம் மற்றும் பல்வேறு திட்டங்கள் குறித்து எடுத்துரைத்தார். இதில் தலைமைக் கழக பேச்சாளர்கள் ராமகிருஷ்ணன், முகம்மதுஅஸ்மத் ஆகியோர் சாதனை திட்டங்கள் குறித்து விரிவாக எடுத்துரைத்தனர்.

இக்கூட்டத்தில் தெற்கு ஒன்றிய செயலாளர் மனோகரன், சேர்மன் தமிழ்ச்செல்வி போஸ், துணை சேர்மன் அய்யனார்,நகரச் செயலாளர் பாலமுருகன், மாவட்ட பிரதிநிதிகள் பாரதிதாசன், காசிலிங்கம், ஊராட்சி மன்ற தலைவர்கள் நாகரத்தினம், காவடிமுருகன், ஒன்றிய கவுன்சிலர்கள் முத்துக்கிளி, உதயகுமார், கிளைச் செயலாளர்கள் மாரியப்பன், தங்கமணி, ஒன்றிய பொருளாளர் முத்து, தங்லெட்சுமி,கட்சி நிர்வாகிகள் மற்றும் பொதுமக்கள் உட்பட 2000க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்

Share this to your Friends

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *