எஸ் செல்வகுமார் செய்தியாளர் சீர்காழி

சீர்காழி அருள்மிகு அபய மீனாட்சி சித்தர் பீடம் மகா கும்பாபிஷேகம். தருமை ஆதீனம் 27-வது குருமஹா சன்னிதானம் ஸ்ரீலஸ்ரீ மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பரமாச்சாரியார் சுவாமிகள் உள்ளிட்ட திரளான பக்தர்கள் பங்கேற்று தரிசனம்.

மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழியில் பழமை வாய்ந்த அருள்மிகு அபயம் மீனாட்சி சித்தர் பீடம் மகா கும்பாபிஷேகம் வெகு விமர்சையாக நடைபெற்றது. பல நூற்றாண்டுகள் பழமை வாய்ந்த கோவில் கிராமவாசிகளால் திருப்பணிகள் செய்யப்பட்டு இன்று கும்பாபிஷேகம் வெகு விமர்சையாக நடைபெற்றது. இதனை முன்னிட்டு நேற்று இரண்டு கால யாகசாலை பூஜைகள் துவங்கியது. இன்று இரண்டாவது கால யாகசாலை பூஜை முடிவடைந்து மகா பூர்ணாகதி மற்றும் தீபாராதனை நடைபெற்றது. தொடர்ந்து யாகசாலையில் இருந்து கடங்கள் புறப்பட்டு மங்கள வாத்தியங்கள் முழங்க கோவிலை வலம் வந்து கோவில் விமானத்தை அடைந்தது. அங்கு சிவாச்சாரியார்கள் வேத மந்திரங்கள் ஓத கோபுர கலசத்தில் புனித நீர் ஊற்றி கும்பாபிஷேகம் நடைபெற்றது இந்நிகழ்வில் தருமபுரம் ஆதீனம் 27-வது குருமகா சன்னிதானம் ஸ்ரீலஸ் ஸ்ரீ மாசிலாமணி தேசிய ஞானசம்பந்த பரமாச்சாரியார் சுவாமிகள் உள்ளிட்ட ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்து வழிபட்டனர்.

Share this to your Friends

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *