தாராபுரம்:சார் பதிவாளர் அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்பு போலீசார் அதிரடி சோதனை!

திருப்பூர் மாவட்டம் தாராபுரம் ஐடிஐ கார்னர் பகுதியில் உள்ள புதிய சார்பதிவாளர் அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்பு போலீசார் அதிரடி சோதனை நடத்தினர். அப்போது கணக்கில் வராத பல லட்சம் ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டது.;

திருப்பூர் மாவட்டம் முழுவதும் அரசு அலுவலகங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் அதிரடி சோதனை நடத்தினர். அதன்படி தாராபுரம் சார் பதிவாளர் அலுவலகத்தில் அதிக லஞ்சம் பெறுவதாகவும், இடைத்தரகர்களின் நடமாட்டம் அதிகரித்துள்ளதாகவும் புகார் பெறப்பட்டதின் அடிப்படையில் சார் பதிவாளர் அலுவலகத்தில் மதியம் 4:00 மணி அளவில் திருப்பூர் மாவட்ட லஞ்ச ஒழிப்பு துறை டி.எஸ்.பி. ரவிச்சந்திரன் தலைமையில் திடீர் சோதனை நடத்தினர்.

10-பேர் கொண்ட அதிகாரிகள், சார்பதிவாளர் அலுவலகத்தில் அதிரடியாக புகுந்து சோதனையில் ஈடுபட்டனர்.பல லட்சங்கள் மற்றும் முக்கிய ஆவணங்கள் பறிமுதல்..

அப்போது பொதுமக்ககள் யாரும் உள்ளே வராதபடி அலுவலகத்தின் நுழைவு வாயில் கதவை பூட்டினர். தொடர்ந்து அலுவலகத்தில் பணியில் இருந்த ஊழியர்களின் டிபன் பாக்ஸ், சாமி படத்தின் பின்பகுதி, அலமாரி உள்ளிட்ட பகுதிகளில் சோதனை செய்தனர். அப்போது அலுவலகத்தில் இருந்து கணக்கில் வராத பல லட்சம் ரூபாயை கைபற்றியதாக கூறப்படுகிறது. தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது.

மேலும் பத்திர பதிவு செய்ய வந்த முதியவர்கள் அவர்களுடன் வந்த உறவினர்கள் மற்றும் குழந்தைகளை உள்ளே வைத்து கதவை லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் மூடியதால் பெற்றோர்கள் அதிர்ச்சி அடைந்தனர். மேலும் படிக்கட்டில் அமர்ந்தபடி குழந்தையை வெளியே விடுமாறு லஞ்ச ஒழிப்புத்துறை போலீசாரிடம் கேட்டு வருகின்றனர்.

Share this to your Friends

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *