பணி நிரந்தரம் செய்தால் முதல்வருக்கு பாராட்டு விழா :பகுதிநேர ஆசிரியர்கள் கூட்டமைப்பு அறிவிப்பு :

முதல்வர் ஸ்டாலின்பகுதிநேர ஆசிரியர்கள் பணி நிரந்தரம் குறித்து
நல்ல முடிவை எடுப்பார்:பள்ளிக்கல்வி மானிய கோரிக்கையில் பள்ளிக்கல்வி அமைச்சரின் சாதகமான பதிலுக்கு வரவேற்பு:தமிழ்நாடு பகுதிநேர ஆசிரியர்கள் கூட்டமைப்பு மாநில ஒருங்கிணைப்பாளர் S.செந்தில்குமார் அறிக்கை:

பள்ளிக்கல்வி மானிய கோரிக்கையின் போது பள்ளிக்கல்வி அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி பதில் அளிக்கையில்,பகுதி நேர ஆசிரியர்களை பணி நிரந்தரம் செய்வது குறித்து திமுக தேர்தல் அறிக்கையில் தெரிவித்திருக்கிறோம். அதனை மறுக்கவில்லை.

பகுதி நேர ஆசிரியர்களுக்கு பணி நிரந்தரம் வழங்குவது குறித்து தமிழக முதலமைச்சர் சரியான முடிவு எடுப்பார் என தெரிவித்து உள்ளார்.இது பகுதிநேர ஆசிரியர்கள் மத்தியில் வரவேற்கப்படுகிறது.14 ஆண்டாக 12 ஆயிரம் பேர் பகுதிநேர ஆசிரியர்களாக உடற்கல்வி ஓவியம் கணினி தையல் இசை போன்ற பாடங்களில் பணிபுரின்கின்றார்கள்.

இன்றைய விலைவாசி உயர்வில் தற்போது வழங்கப்படும் 12,500 ரூபாய் சம்பளத்தை வைத்து கொண்டு குடும்பத்தை நடத்த முடியவில்லை.மே மாதம் சம்பளம் மற்றும் அரசு சலுகைகள் ஒருபோதும் இல்லாமல் பணிபுரிவதால் வாழ்வாதாரம் இழந்து உள்ளார்கள்.

எனவே, பணி நிரந்தரம் செய்து காலமுறை சம்பளம் வழங்கப்பட்டால் மட்டுமே இனி எஞ்சிய காலத்தை நிம்மதியாக வாழ முடியும் சூழ்நிலையில் உள்ளார்கள்.இந்த கஷ்டங்களை முதல்வருக்கு தெரியப்படுத்த நேரிலும், தபாலிலும் மனு கொடுத்து வருகிறோம்.

போராட்டங்கள் நடத்தி உள்ளோம்.சட்டசபையிலும், மக்கள் சபையிலும் அனைத்து அரசியல் கட்சிகளும் வலியுறுத்தி வருகிறது.இது திமுக தேர்தல் வாக்குறுதி 181-ல் முதல்வர் சொன்னது.

எனவே 12 ஆயிரம் குடும்பங்கள் பலன் அடைய இந்த பட்ஜெட் கூட்டத்தொடரிலே முதல்வர் 110 விதியில் பகுதிநேர ஆசிரியர்களை பணி நிரந்தரம் செய்து,சிறப்பாசிரியர்களாக பணியமர்த்தி அறிவிக்க வேண்டும்.

பணி நிரந்தரம் செய்தால் முதல்வருக்கு பாராட்டு விழா எடுக்க உள்ளோம்.

S.செந்தில் குமார்
மாநில ஒருங்கிணைப்பாளர்,
பகுதிநேர ஆசிரியர்கள் கூட்டமைப்பு,
Cell: 9487257203

Share this to your Friends

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *