காஞ்சிபுரம் மாநகராட்சி ரயில்வே சாலையில் அமைந்துள்ள திமுக கொள்கைப் பரப்புச் செயலாளரும், காஞ்சிபுரம் சட்டமன்ற உறுப்பினருமான சி.வி.எம்.பி. எழிலரசன் பாட்டனார் முன்னாள் அமைச்சர் பேரறிஞர் அண்ணாவால் அழைக்கப்பட்ட செந்தமிழ்ச் செல்வர் சி.வி.எம். அண்ணாமலை 28ஆம் ஆண்டு நினைவு நாளை முன்னிட்டு காஞ்சிபுரம் சட்டமன்ற உறுப்பினரின் இல்லத்தில் மலர்களால் அலங்கரிக்கப்பட்ட சிபிஎம் அண்ணாமலை திருவுருவப் படத்திற்கு மாலை அணிவித்து மலர்தூவி நினைவஞ்சலி செலுத்தினர்.

இந்நிகழ்வில் மாநகர செயலாளர் சி கே வி தமிழ்ச்செல்வன், மாநகராட்சி மேயர் மகாலட்சுமி யுவராஜ், பகுதிக் கழக செயலாளர்கள் திலகர், சந்துரு, வெங்கடேசன், ஒன்றியக்குழு பெருந்தலைவர்கள் மலர்கொடிகுமார், ஆர் கே தேவேந்திரன், ஒன்றியச் செயலாளர்கள் பி எம் குமார், படு நெல்லி பாபு, குமணன், மாநகராட்சி மாமன்ற உறுப்பினர்கள், மாவட்ட, ஒன்றிய, பேரூராட்சி, பகுதி, வட்டக் கழக நிர்வாகிகள், கழக சார்பு அணிகளின் அமைப்பாளர்கள், துணை அமைப்பாளர்கள் உள்ளிட்ட ஏராளமான திமுகவினர் மற்றும் சி.வி.எம். குடும்பத்தினர் கலந்துக் கொண்டு பூமாலை அனிவித்து, மலர்தூவி அஞ்சலி செலுத்தினர்.
அதனைத்தொடர்ந்து காலை சிற்றுண்டியும், காஞ்சிபுரம் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனை முன்பும், பூக்கடை சத்திரம் பகுதியில் ஏழை, எளியோருக்கு அன்னதானம் வழங்கப்பட்டன.