செயலி மூலம் தற்பொழுது அதிகளவில் வேலை வாங்கித் தருவதாகவும் பணம் மோசடியில் ஈடுபட்டு வருவதாகவும் பொதுமக்கள் விழிப்புணர்வு இருக்க வேண்டும் என்று கோவை காவல் ஆணையர் எச்சரிக்கை

 பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான சைபர் குற்றங்கள் குறித்து கோவையில் இருந்து இந்தியா முழுவதும் சென்று விழிப்புணர்வு ஏற்படுத்தும் இரு இளைஞர்களின் தொடர் பயணத்தை கோவை மாநகர காவல் ஆணையர் சரவணசுந்தர் துவக்கி வைத்தார்.

இந்நிலையில் இது குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் கோவையை சேர்ந்த இளைஞர்கள் சங்கர்ராஜ் சுப்ரமணியம் மற்றும் தினேஷ்குமார் ஆகியோர் இந்தியா முழுவதும் விழிப்புணர்வு பயணம் செல்கின்றனர்.

கோவையில் இருந்து சுமார் 17,000 கிலோ மீட்டர் தூரம் இந்தியா முழுவதும் 28 மாநிலங்கள்,6 யூனியன் பிரதேசங்கள் என உள்ள பள்ளி கல்லூரிகளில் விழிப்புணர்வு செய்யும் நோக்கத்துடன் பயணம் செய்தனர்.

தற்போது பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான சைபர் கிரைம் குற்றங்கள் தொடர்ந்து அதிகரித்துக் கொண்டே வருகிறது. குறிப்பாக மொபைல் போன் செயலி மற்றும் கணிணிகளை பயன்படுத்தும் பள்ளி கல்லூரி மாணவர்களை குறி வைப்பது, மோசடி அழைப்புகளால் பணம் பறிப்பது,பெண்களின் புகைப்படங்களை தவறாக சித்தரித்து சைபர் கிரிமினல்கள் குற்ற செயல்களில் ஈடுபடுவது என தொடர்ந்து சைபர் குற்றங்கள் தொடர்பான புகார்கள் அதிகரித்து வருகின்றன.

Share this to your Friends

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *