பாபநாசம் செய்தியாளர்
ஆர் தீனதயாளன்

பாபநாசம் அருகே ராஜகிரியில் வஃக்பு வாரிய திருத்த சட்டத்தை திரும்ப பெறக்கோரி மஸ்ஜிதுத் தக்வா ஹனஃபி கீழப்பள்ளி நிர்வாக சபை சார்பில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்

தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசம் தாலுக்கா ராஜகிரியில் வக்பு வாரிய திருத்த சட்ட மசோதாவை திரும்ப பெறக் கோரி மஸ்ஜிதுத் தக்வா ஹனஃபி கீழப்பள்ளி நிர்வாக சபை சார்பில் பள்ளிவாசல் தலைவர் முகம்மது சரீஃப் தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

இந்த ஆர்ப்பாட்டத்தில் மத்திய அரசு அமல்படுத்தி உள்ள வக்பு திருத்த சட்ட மசோதாவை திரும்ப பெற கோரி வலியுறுத்தி கையில் கருப்பு கொடியுடன் கருப்பு சட்டை அணிந்து கண்டன முழக்கமெட்டு 100க்கும் மேற்பட்டோர் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

இதில் பள்ளிவாசல் நிர்வாகிகள் ஜமாத்தார்கள் மற்றும் ஏராமானோர் கலந்து கொண்டனர் ஆர்ப்பாட்டத்தில் முகமது ஆரிப் ,முகமது இலியாஸ் அன்வர் பாட்சாஅனைத்துக் கட்சி நிர்வாகிகள் துளசிஅய்யா, இப்ராஹிம் நிர்வாகிகள் என ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கையில் கருப்பு கொடியுடன் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்

Share this to your Friends

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *