உலகின் பாதுகாப்பான நகரம் அபுதாபி என ,5000 பேர் ஐன்ஸ்டீன் உலக சாதனை புத்தகத்தில் இடம் பிடித்து அசத்தல்
2025 ஆம் ஆண்டிற்கான உலகின் பாதுகாப்பாக வாழக்கூடிய நகரமாக ஐக்கிய அரபு எமிரேட்ஸ் நாட்டின் நகரமான அபுதாபி அறிவிக்கப்பட்டது.
தொடர்ந்து ஒண்பதாவது ஆண்டாக இந்த பட்டத்தை பெற்றுள்ள நிலையில்,இதனை கொண்டாடும் விதமாக புதுமை தமிழச்சி பெண்கள் குழு சார்பாக அபுதாபி காவல் துறையினரை கவுரவிக்கும் விழா அல்ஷம்கா பகுதியில் உள்ள காவல் துறை மைதானத்தில் நடைபெற்றது..
ஐக்கிய அரபு எமிரேட்ஸ் நாட்டை சேர்ந்த கே.ஆர்.குழும நிறுவனம் மற்றும் அதீப் நிறுவனங்கள் இணைந்து நடத்திய,இதில் அபுதாபி நிர்வாகத்தை கவுரவிக்கும் விதமாக உலகின் பாதுகாப்பான நகரம் அபுதாபி எனும் தலைப்பில் 5000 பேர் வெண்மை ஆடை அணிந்து நின்றனர்..
இந்தியா மற்றும் பல்வேறு நாடுகளை சேர்ந்தோர் அபுதாபியில் வாழ்ந்து வரும் நிலையில் சமூக நல்லிணக்க ஒருமைபாட்டை பறைசாற்றும் விதமாக நடைபெற்ற இந்நிகழ்வு ஐன்ஸ்டீன் உலக சாதனை புத்தகத்தில் இடம் பிடித்தது…
தொடர்ந்து ஐன்ஸ்டீன் உலக சாதனை மேலாண் இயக்குனர் மோனிகா ரோஷ்னி உலக சாதனை சான்றிதழை அனைவருக்கும் வழங்கி கவுரவித்தார்…