திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரத்தில் புனரமைக்கப்பட்ட சட்டமன்ற உறுப்பினர் அலுவலகம் மற்றும் இ-சேவை மைய கட்டிடத்தை மாண்புமிகு ஊரக வளர்ச்சி துறை அமைச்சர் ஐ.பெரியசாமி மற்றும் மாண்புமிகு உணவு மற்றும் உணவுப் பொருள் வழங்கல் துறை அமைச்சர் அர.சக்கரபாணி ஆகியோர் திறந்து வைத்தனர்.
இந்நிகழ்ச்சியில் திண்டுக்கல் நாடாளுமன்ற உறுப்பினர்.சச்சிதானந்தம், வேடசந்தூர் சட்டமன்ற உறுப்பினர் காந்திராஜன் மற்றும் திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர்.சரவணன் மற்றும் அரசு அலுவலர்கள், பொதுமக்கள் பங்கேற்றனர்.