ராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூர் அருகே கீரனூர் கிராமத்தில் பசும்பொன் உ.முத்துராமலிங்கத் தேவர் நினைவு கல்லூரி நாட்டு நலப்பணித் திட்டம் நடைபெற்றது பயிற்சி முகாம் 24.03.25 முதல் 30.03.25 வரை நடைபெறுகிறது

முதல்வர் கோ.தர்மர் தலைமை வகித்தார், கிராமத் தலைவர் எஸ். சுப்பிரமணியன் என்.எஸ். எஸ். கொடியேற்றி குத்துவிளக்கு ஏற்றி தொடங்கி வைத்தார், நாட்டு நலப்பணித் திட்டம் ஒருங்கிணைப்பாளர் பேராசிரியர் மாமல்லன் அனைவரையும் வரவேற்றார்.

சிறப்புவிருந்தினராக ஸ்ரீ பகவதி அறக்கட்டளையின் தலைவரும் போஷன் அபியான் திட்டத்தின் வட்டார ஒருங்கிணைப்பாளர் மு.வெள்ளைப்பாண்டியன் யூத் இந்தியா என்ற தலைப்பில் மத்திய, மாநில அரசின் திட்டங்களையும், மாணவர்களின் சட்ட உரிமைகள் என்ற தலைப்பில் பேசினார்,

இளம் தொழில் முனைவோர் பத்திரிக்கையாளர் எம். ஆர்.பி விக்னேஸ்வரன் இளம் தொழில் முனைவோர்கள் ஸ்டாப் இந்தியா என்ற தலைப்பில் உரையாற்றினார், சமூக ஆர்வலர் விஜயன் “மக்கள் சேவையில் இளைஞர்கள்” என்ற தலைப்பில் பேசினார்,முகாமில் 150க்கும் மேற்பட்ட மாணவர்கள் கலந்துகொண்டு ஊராட்சி அலுவலகம், அங்கன்வாடி மைய வளாகம்,கால்நடை மருத்துவமனை வளாகத்தினையும் சுத்தம் செய்தனர். நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை ஒருங்கிணைப்பாளர் முனைவர் சி.கஜேந்திரநாயகம் செய்திருந்தார் முனைவர் ரா.மேரிசுஜின் நன்றி கூறினார்.

Share this to your Friends

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *