புதுச்சேரி தவளகுப்பம் தனியார் பள்ளி சிறுமி பாலியல் வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட ஆசிரியருக்கு முன் ஜாமின் வழங்க பெண்கள் அமைப்பு எதிர்ப்பு.

குற்றவாளியை சிறையில் வைத்தே தண்டனை வழங்க வேண்டும் என வலியுறுத்தி கையில் பதாகைகளை ஏந்தி நீதிமன்ற நுழைவாயில் முன்பு போராட்டம்

புதுச்சேரி அடுத்த தவளக்குப்பம் தனியார் பள்ளியில் கடந்த மாதம் 14-ம் தேதி ஒன்றாம் வகுப்பு படிக்கும் மாணவி பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்ட வழக்கில், அதே பள்ளியில் பணி புரிந்த ஆசிரியர் மணிகண்டன் கைது செய்யப்பட்டு கடத்த 40 நாட்களாக காலாப்பட்டு சிறையில் இருந்து வருகிறார்.

அவருடைய முன் ஜாமின் மனு இன்று புதுச்சேரி சிறப்பு போக்ஸோ நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்த பெண்கள் அமைப்பினர் குற்றம் சாற்றப்பட்ட ஆசிரியர் மணிகண்டனுக்கு முன்ஜான் வழங்கக் கூடாது என நீதிபதியிடம் கோரிக்கை மனு அளித்தனர்.

தொடர்ந்து நீதிமன்றத்தின் வெளியே வந்து அவர்கள் கையில் பதாகைகளை ஏந்தி நீதிமன்ற நுழைவாயில் முன்பு போராட்டத்திலும் ஈடுபட்டனர். சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் சமாதானப் பேச்சு நடத்தினர் இதனை அடுத்து அவர்கள் போராட்டத்தை கைவிட்டு களைந்து சென்றனர்.

போராட்டம் குறித்து திமுக மகளிர் அணி மாநில செயலாளர் காயத்ரி ஸ்ரீகாந்த் கூறும்போது…

பாலியல் வழக்கில் சிறையில் அடைக்கப்பட்டு இருக்கும் ஆசிரியர் மணிகண்டனுக்கு ஒருபோதும் முன் ஜாமின் வழங்கக் கூடாது, அவருக்கு ஜாமின் வழங்கி வெளியே வந்தால் சாட்சிகளை கலைத்து விடுவார், எனவே அவருக்கு முன் ஜாமீன் வழங்காமல் சிறையில் வைத்தே தண்டனையை வழங்க வேண்டும் அதுவரை எங்களது போராட்டம் தொடரும் என்று குறிப்பிட்டார்.

பேட்டி: காயத்ரி ஸ்ரீகாந்த், திமுக மகளிர் அணி மாநில செயலாளர்

Share this to your Friends

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *