ராமநாதபுரம் மாவட்டம்,கமுதியில் உள்ள கே.என். மெட்ரிக் மேல்நிலைபள்ளியில்
ரமலான் பண்டிகையின் சிறப்புகுறித்து விளக்கினார்கள் பள்ளி வளாகத்தில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில் ரஹ்மானியா மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி அராபிக் ஆசிரியை சாஹிதா சுல்தானா கலந்து கொண்டு ரமலானின் நோக்கங்கள் மற்றும் வழிமுறைகள் குறித்து எடுத்துரைத்தார்.

மேலும் பள்ளியில் படிக்கும் இஸ்லாமிய மாணவ, மாணவிகள் குர்-ஆன் வாசித்தும், இஸ்லாமிய பாடல் பாடியும் சிறப்பு செய்தனர். இந்நிகழ்ச்சிக்கு பள்ளியின் செயலர் யோகேஸ்வரன் தலைமை தாங்கினார். தலைவர் அய்யாதுரை, பொருளாளர் குமரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.


உறுப்பினர்கள், பள்ளி முதல்வர் கார்த்திக் காமாட்சி மற்றும் ஆசிரிய, ஆசிரியர்கள் மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர் அனைவருக்கும் இனிப்பு வழங்கப்பட்டது.

Share this to your Friends

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *