அரியலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டாக்டர்.தீபக் சிவாச் I.P.S.,அவர்களின் உத்தரவின்படி, 25.03.2025 இன்று சமூகநீதி மற்றும் மனித உரிமைகள் பிரிவு காவல்துறையினர் சார்பாக விழிப்புணர்வு பேரணி நடத்தினார்கள். 


      கூடுதல் காவல் கண்காணிப்பாளர் (தலைமையிடம்)  .R.முத்தமிழ்ச் செல்வன்  இப்பேரணியை தொடங்கி வைத்து தலைமை வகித்தார்கள்.

துணைக் காவல் கண்காணிப்பாளர் சமூக நீதி மற்றும் மனித உரிமைகள் பிரிவு K.கென்னடி முன்னிலை வகித்தார்கள்.

 இந்நிகழ்ச்சியில் அரியலூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட, அரியலூர் அரசு தொழிற்பயிற்சி நிறுவனத்தில் பயிலும் மாணவர்கள் கலந்து கொண்டு, மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முதல் அரியலூர் பழைய பேருந்து நிலையம் அண்ணா சிலை வரை, தீண்டாமையை ஒழிக்கவும், ஏற்றத்தாழ்வும் இன்றி ஒற்றுமையாக இருக்க வேண்டும் என்றும்,சாதி மத இன வேறுபாடு இன்றி அனைவரும் ஒற்றுமையுடன் வாழ வேண்டும் என்ற கருத்துக்களை வலியுறுத்தி விழிப்புணர்வு பதாகை ஏந்தியும் பேரணி நடைபெற்றது.                 இப்பேரணியில்  அரசு தொழிற்பயிற்சி நிறுவன பயிற்றுநர்கள்  மற்றும் சமூக நீதி மனித உரிமைகள் பிரிவு அலுவலர்கள், காவல் உதவி ஆய்வாளர் R.ரவி, புள்ளியியல் ஆய்வாளர் R.பாப்பாத்தி, சிறப்பு உதவி ஆய்வாளர் S.சுமதி, காவலர் R.கார்த்திக், ஆகியோர்கள் கலந்து கொண்டனர்.
Share this to your Friends

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *