தொப்பூர் ஜெயலட்சுமி பொறியியல் கல்லூரியில் சிரிஷ்டி 2025 சங்கம் துவக்க விழா நடைபெற்றது.

இக்கருத்தரங்கம் கல்லூரியின் கட்டிடவியல் மற்றும் வேளாண் துறை சார்பில் நிகழ்வு நடைபெற்றது.இந்நிகழ்வு தொப்பூர் ஜெயலட்சுமி பொறியியல் கல்லூரியின் கலையரங்கத்தில் நடைபெற்றது.இந்நிகழ்விற்கு ஜெயலட்சுமி பொறியியல் கல்லூரியின் நிறுவனர் அரிமா சுப்பிரமணி மற்றும் தாளாளர் டாக்டர் கோவிந்த் தலைமை வகித்தார்.

கல்லூரி செயலாளர் காயத்ரி சுப்பிரமணியம், அறங்காவலர் காயத்ரி கோவிந்த் ஆகியோர் முன்னிலை வகித்தனர் கல்லூரி முதல்வர் தமிழரசு வாழ்த்துரை வழங்கினார்கட்டிடவியல் துறைத் தலைவர் சக்திவேல் வரவேற்று பேசினார்.

V.V.K கட்டுமான அமைப்பின் இயக்குனர் மாதேஷ்வரன் அமைப்பைத் தொடங்கி வைத்து அமைப்புகள் குறித்த கருத்துரை வழங்கினார்.நிறைவாக வேளாண் துறைத் தலைவர் மணிவேல் கிருஷ்ணன் நன்றி கூறினார்.

நிகழ்வில் பேராசிரியர்கள் மாணவ மாணவிகள் என பலரும் கலந்துகொண்டனர்.

Share this to your Friends

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *