மதுரை மாவட்டம், மத்திய சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட பகுதியில் உள்ள மதுரை கல்லூரி மைதானத்தில் அரசின் நலத்திட்ட சிறப்பு குறைதீர்க்கும்
முகாமை, மாண்புமிகு தகவல் தொழில்நுட்பவியல் மற்றும் டிஜிட்டல் சேவைகள் துறை அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் அவர்கள்தொடங்கி வைத்து, பொதுமக்கள் அளித்த பல்வேறு கோரிக்கை மனுக்களை பெற்றுக் கொண்டு சிறப்புரையாற்றி
னார்.
இந்த முகாமின் போது, மதுரை மேயர் இந்திராணி, மாநகராட்சி ஆணையர் சித்ரா விஜயன், , மதுரை வருவாய் கோட்டாட்சியர் ஷாலினி, தனித்துணை ஆட்சியர் (சமூக பாதுகாப்பு திட்டம்) சங்கீதா ,மத்திய மண்டலத்தலைவர் பாண்டிச்செல்வி மிசா பாண்டியன், சரவண புவனேஸ்வரி, மற்றும் அரசு அலுவலர்கள் மாமன்ற உறுப்பினர்கள் உட்பட அரசு அலுவலர்கள்பலர் கலந்து கொண்டனர்.