சமத்துவ மக்கள் கழகத்தின் 10ஆம் ஆண்டு துவக்க விழா நேற்று சென்னை திருவொற்றியூர் தலைமை அலுவலகத்தில். நடைபெற்றது நிறுவனத் தலைவர் எர்ணாவூர் நாராயணன் தலைமையில் கழக கொடி ஏற்றி கேக் வெட்டி தொண்டர்களுக்கும் பொது மக்களுக்கும் இனிப்புகள் வழங்கினார். இளைஞரணி செயலாளர் கார்த்திக் அனைவரையும் வரவேற்றார். முன்னதாக பெருந்தலைவர் காமராஜர் திருவுருவ படத்திற்கு மாலை அணிவித்து மலர் தூவி தலைவர்கள் மரியாதை செலுத்தினர்.

இந்நிகழ்ச்சியில் கழகப் பொருளாளர் கண்ணன், தலைமை நிலைய செயலாளர் தங்கமுத்து ,துணைச் செயலாளர் விநாயகமூர்த்தி, கொள்கை பரப்புச் செயலாளர் முனீஸ்வரன், இளைஞரணி துணை செயலாளர்கள் நடராஜன், மீனவர் அணி துணைச் செயலாளர் வினி, வடசென்னை கிழக்கு மாவட்ட செயலாளர் பாஸ்கர் ,மேற்கு மாவட்ட செயலர் வில்லியம்ஸ், திருவள்ளூர் கிழக்கு மாவட்ட செயலாளர் விஜயன், மற்றும் ஏராளமான நிர்வாகிகள் இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.

Share this to your Friends

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *