திருவாரூர் மாவட்டம் வலங்கைமான் செட்டித் தெரு ஸ்ரீ வேம்படி சீதளா தேவி மகா மாரியம்மன் ஆலயத்தில் பங்குனி திருவிழாவை முன்னிட்டு முதல் காப்பு கட்டுதல் நிகழ்ச்சி நடைபெற்றது. நிகழ்ச்சியை ஒட்டி மதியம் 12 மணி அளவில் அம்மனுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனையும், தீபாராதனையும் நடைபெற்று பக்தர்களுக்கும், பொது மக்களுக்கும் அருட்பிர சாதமும், அன்னதானமும் வழங்கப்பட்டது.

மாலை 6:00 மணிக்கு வலங்கைமான் குடமுருட்டி ஆற்றில் இருந்து பூஜைகள் செய்து முதல் காப்பு கட்டி, சக்தி கரகம் எடுத்து வீதி உலா காட்சி நடை பெற்று, ஆலயம் வந்தடைந்து பூஜைகள் நடைபெற்று தீபாராதனை நடைபெற்று பக்தர்களுக்கும் பொதுமக்களுக்கும் அருட்பிரசாதமும் அன்னதானமும் வழங்கப்பட்டது.

வருகின்ற மாற்றி 9- ஆம் தேதி (மாசி மாதம் 25ஆம் தேதி)ஞாயிற்றுக்கிழமை ஸ்ரீ அம்பாளுக்கு இரண்டாம் காப்பு கட்டுதலும் ,அன்று முதல் தினசரி ஸ்ரீஅம்மன் பல்வேறு வாகனங்களில் வீதி உலா காட்சியும், மார்ச் மாதம் 16- ஆம் தேதி (பங்குனி மாதம் 2- ஆம் தேதி)ஞாயிற்றுக்கிழமை பங்குனிபெருந்திருவிழா நிகழ்ச்சியும், மார்ச் மாதம் 23-ஆம் தேதி (பங்குனி மாதம் 9- ஆம்தேதி)ஞாயிற்றுக்கிழமை ஸ்ரீ அம்பாளுக்கு புஷ்பப் பல்லக்கு விழாவும் நடைபெறுகிறது.

பங்குனி திருவிழா ஏற்பாடுகளை ஆலய செயல் அலுவலர் கோ. கிருஷ்ணகுமார், தக்கார்/ ஆய்வர் க. மும்மூர்த்தி, வலங்கைமான் செட்டித் தெரு நிர்வாகிகள், செட்டித்தெரு வாசிகள் மற்றும் ஸ்ரீ சீதளா தேவி இளைஞர் நற்பணி மன்றம், மண்டகப்படி தாரர்கள், நகரவாசிகள் சிறப்பாக செய்து வருகின்றனர்.

Share this to your Friends

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *