மதுரையில் ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சிப்பணிகளதிட்டம் சார்பாக,
சமுதாய வளைகாப்பு விழா,
தகவல் தொழில்நுட்பவியல் மற்றும் டிஜிட்டல் சேவைகள் துறை அமைச்சர் முனைவர் பழனிவேல் தியாகராஜன் தலைமையில் நடைபெற்றது.
மதுரை மத்திய சட்டமன்ற தொகுதி எஸ்.எஸ் காலனியில் சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை மற்றும் ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சிப் பணிகள் திட்டம் சார்பில், நடைபெற்ற சமுதாய வளைகாப்பு விழாவில் கர்ப்பிணி தாய்மார்களுக்கு வளைகாப்பு சீதனப் பொருட்களை தகவல் தொழில்நுட்பவியல் அமைச்சர் பி.டி.ஆர் பழனிவேல் தியாகராஜன் வழங்கினார்.
மதுரை மாவட்ட ஆட்சியர் சங்கீதா ,மேயர் இந்திராணி,
மண்டலத்தலைவர் பாண்டிச்செல்வி, ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சித் திட்ட அலுவலர் ஷீலா சுந்தரி, உதவி நகர்நல அலுவலர் அபிஷேக், மதுரை மேற்கு வட்டாட்சியர் செந்தாமரை வள்ளி, மாமன்ற உறுப்பினர் செல்விஉட்பட பலர் கலந்து கொண்டனர்.