மார்ச் 04 அன்று தென்காசி மாவட்டத்தில் உள்ளூர் விடுமுறை மாவட்ட ஆட்சித் தலைவர் அறிவிப்பு

தென்காசி,

தென்காசி மாவட்டத்தில் அய்யா வைகுண்டசாமியின் 193 வது அவதார திருவிழாவை முன்னிட்டு வரும் 04.03.2025 செவ்வாய்க்கிழமை உள்ளூர் விடுமுறை விடப்படுவதாக தென்காசி மாவட்ட ஆட்சித் தலைவர் அறிவித்துள்ளார்.

இதுகுறித்து தென்காசி மாவட்ட ஆட்சித்தலைவர் ஏகே கமல் கிஷோர் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது;-

கன்னியாகுமரி மாவட்டம், சுவாமித்தோப்பு, அய்யா வைகுண்டசாமியின் 193 வது அவதார திருவிழா 04.032025(செவ்வாய்க்கிழமை) அன்று நடைபெறவுள்ளதை முன்னிட்டு 04.03.2025 அன்று தென்காசி மாவட்டத்திலுள்ள அனைத்து பள்ளி, கல்லூரிகளில் நடைபெற்று வரும் பொதுத்தேர்வுகள் மற்றும் முக்கியத் தேர்வுகளுக்கு இடையூறு ஏற்படாத வகையில் அனைத்து மாநில அரசு அலுவலகங்களுக்கும். நிறுவனங்களுக்கும் உள்ளூர் விடுமுறை நாளாக அறிவித்து ஆணையிடப்படுகிறது.

மேற்குறிப்பிட்ட நாளில் அரசு பொதுத்தேர்வுகள் ஏதேனுமிருப்பின் சம்பந்தப்பட்ட தேர்வு எழுதும் பள்ளி மாணவர்கள், மற்றும் பொதுத்தேர்வு தொடர்பாக பணியாற்றும் ஆசிரியர்கள் மற்றும் அலுவலர்களுக்கு இந்த உள்ளூர் விடுமுறையானது பொருந்தாது எனவும். மேலே குறிப்பிட்டுள்ள உள்ளூர் விடுமுறையை ஈடு செய்யும் வகையில் 15.03.2025 சனிக்கிழமை அன்று தென்காசி மாவட்டத்திற்கு வேலை நாளாக அறிவிக்கப் படுகிறது என மாவட்ட ஆட்சித்தலைவர் ஏ.கே.கமல்கிஷோர் தெரிவித்துள்ளார்.

Share this to your Friends