செங்கல்பட்டு மாவட்டம் பாரத பிரதமரின் தேசிய திட்டத்தின் கீழ் ஏழை
மாணவர்கள் நலச்சங்கம்- மின்னல் காஞ்சிபுரம் மாவட்ட பார்வை இழப்பு தடுப்பு சங்கம் மற்றும் பம்மல் சங்கரா கண் மருத்துவமனை இணைந்து மின்னல் கிராமத்தில்
ஏழை மாணவர்கள் நலச்சங்க அலுவலகத்தில் நடத்திய மாபெரும் இலவச கண்புரை அறுவை சிகிச்சை தேர்வு முகாமில் 34 நபர்கள் கலந்து கொண்டனர்.
24 நபர்களில் ஆண்கள் 09+பெண்கள் 15 என இலவச கண் புரை அறுவை சிகிச்சைக்காக தேர்வு செய்யப்பட்டு பம்மல் சங்கரா கண் மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்டனர். பிப்ரவரி 2025 முதல் ஆர். இ. சி அறக்கட்டளையுடன் இணைந்து கண்ணொளி பார்வை பாதுகாப்பு திட்டத்தின் மூலம் முதல்வர் காப்பீடு மற்றும் பிரதமர் காப்பீடு அட்டை உள்ள பயனாளர்களுக்கு லேசர் சிகிச்சை வழங்கப்படும். இத்திட்டத்தின் முதல் முகாம் மின்னல் ஏழை மாணவர்கள் நல சங்கத்தின் பொதுச்செயலாளர்மின்னல் ஸ்ரீதர் தலைமையில் நடைபெற்றது.
முகாமில் கலந்து கொண்ட அனைவருக்கும் எஸ்.வி.ஸ்ரீ ராமலு ரெட்டி உணவு வழங்கினார். மேலும்காலை சிற்றுண்டி, தேநீர் உபசரிப்பும், எதிர்வரும் வெள்ளிக்கிழமை அறுவை சிகிச்சை முடிந்து வரும் நோயாளிகளுக்கு சிற்றுண்டியும் அச்சிறுபாக்கம் டாக்டர். ஜாகிர் உசேன் வழங்குகிறார். இம் முகாமிற்கு உதவிய அனைவருக்கும் நெஞ்சார்ந்த நன்றியை ஏழை மாணவர்கள் நலச்சங்கத்தினர் நன்றியை தெரிவித்தனர்.