கும்பகோணத்தில் புல்வாமாதாக்குதலில் உயிரிழந்தராணுவ வீரர்களுக்குசிவசேனா கட்சிசார்பில் நினைவஞ்சலி…..

மகாராஷ்டிரா துணை முதல்வர் திரு ஏக் நாத் சிண்டே .ஜி கீழ் இயங்கும் சிவ சேனா கட்சி தமிழகம் சார்பாக கோயம்புத்தூரில் இஸ்லாமிய பயங்கரவாதிகளால் திட்டமிட்டு வெடிகுண்டு தாக்குதலால் பலியான அப்பாவி பொதுமக்களுக்கும் மற்றும் புல்வாமாவில் பாகிஸ்தான் பயங்கரவாதிகளால் தாக்கபட்டு வீரமரணம் அடைந்த தேசத்தின் ராணுவ வீரர்களின் ஆறாம் ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டும்
அவர்களின் தியாகத்தை போற்றும் விதமாக தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் அருகே அம்மாசத்திரம் பகுதியில் சிவசேனா கட்சி அலுவலகத்தில் மாநில துணைத் தலைவர் பூக்கடை எஸ் ஆனந்த். தலைமையில் மலர் தூவி நினைவேந்தல் மரியாதை செய்யப்பட்டது

மற்றும் இரண்டு நிமிடம் மௌன அஞ்சலி செலுத்தப்பட்டது இந்நிகழ்ச்சியை குடந்தை மாநகரத் தலைவர் அரவிந்த் மற்றும் நகரச் செயலாளர் சந்தோஷ் ஏற்பாடு செய்திருந்தார்கள்

இதில் சிறப்பு விருந்தினர்களாக அகில பாரத இந்து மகா சபா மாநில பொதுச் செயலாளர் செந்தில் முருகன் அகில பாரத இந்து மகா சபா மாநில பொதுச் செயலாளர் ராம.நிரஞ்சன் சிவசேனா சிவ.ந. சரவணன் தென்னிந்திய பார்வர்டு பிளாக் கட்சி தஞ்சை மாவட்ட தலைவர் க .மாதவன் ஆர் எஸ் எஸ் .சேவா பாரதி தஞ்சை மாவட்ட தலைவர் சுதர்சன் அகில பாரத இந்து மகா சபா தஞ்சை மாவட்ட பொது செயலாளர் தட்சிணாமூர்த்தி தென்னிந்திய பார்வர்டு பிளாக் கட்சி நகர செயலாளர் எல் .முருகன் நகர தலைவர் ஆர் கணேசன் நகர இளைஞரணி தலைவர் ஹரிஷ் கே.எம்.பரத் பி.ஜே.பி கும்பகோணம் மற்றும் சிவ சேனா தஞ்சை மண்டல தலைவர் ப. உதயகுமார்தஞ்சை மாவட்ட தலைவர் வெங்கடேஷ் திருவிடைமருதூர் ஒன்றிய செயலாளர் ப.கார்த்தி இளைஞரணி கிழக்கு ஒன்றிய தலைவர் S.மரியா மற்றும் சிவசேனா கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்

WhatsAppShare

Share this to your Friends