தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி கிருஷ்ணா நகரில் உள்ள அதிமுக வடக்கு மாவட்ட அலுவலகத்தில் அதிமுக வடக்கு மாவட்டத்திற்கு புதிதாக நியமிக்கப்பட்ட நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்திற்கு முன்னாள் அமைச்சரும், கோவில்பட்டி சட்டமன்ற உறுப்பினரும், அதிமுக வடக்கு மாவட்ட செயலாளருமான கடம்பூர் செ.ராஜூ தலைமை வகித்தார். புதிதாக நியமிக்கப்பட்ட நிர்வாகிகள் அவரிடம் வாழ்த்து பெற்றனர்.

புதிதாக நியமிக்கப்பட்ட நிர்வாகிகளுக்கு ஆலோசனை வழங்கி முன்னாள் அமைச்சர் கடம்பூர் செ.ராஜூ பேசுகையில் 524வாக்கறுதிகளை கொடுத்து ஆட்சிக்கு வந்த திமுக 50 வாக்குறுதிகளை கூட நிறைவேற்றவில்லை.சட்டம் ஒழுங்கு சீர்குலைவு, விலைவாசி உயர்வு, கஞ்சா உள்ளிட்ட போதைப் பொருட்கள் நடமாட்டம் திமுக ஆட்சியில் அதிகரித்துள்ளது

டெல்டா பகுதியில் விவசாயிகள் கண்ணீரில் மிதக்கும் அல்ல நிலை திமுக ஆட்சியில் உள்ளது கைக்கு எட்டியது வாய்க்கு எட்டாமல் விவசாயிகள் தவித்து வருகின்றனர்

தூத்துக்குடி மாவட்டத்தில் காட்டு பன்றிகள், மான்கள் தொல்லையினால் விவசாயிகள் கடந்த 5 ஆண்டுகளாக பாதிக்கப்பட்டு வருகின்றனர். ஆனால் எந்த நிவாரணமும், பிரச்சனைக்கு தீர்வு காணவில்லை

அரசு ஊழியர்கள், ஆசிரியர்களை பழைய ஓய்வூதிய திட்டத்தின் பெயரில் ஏமாற்றி உள்ளனர் இந்த ஆட்சியில் தூய்மை பணியாளர்கள் பாதிக்கப்பட்டு போராடும் நிலை உள்ளது.தூய்மைப் பணியாளர்கள் முதல் கோட்டையில் உள்ள உயர் அதிகாரிகள் வரை ஏமாற்றப்பட்டு, ஏமாற்றத்தின் விளிம்பில் உள்ளனர். மக்கள் விரக்தியில் உள்ளனர்

2026 சட்டமன்ற தேர்தல் திமுகவிற்கு சோதனையான தேர்தலாகவும், அதிமுகவிற்கு சாதனையான தேர்தலாக இருக்கும் என்றார்.

இதில் முன்னாள் எம்எல்ஏ மோகன், ஒன்றிய செயலாளர்கள் செல்வக்குமார், பழனிச்சாமி, போடூசாமி, உள்பட பலர் கலந்து கொண்டனர்