இருமாதங்களுக்கு முன்பு பெய்த கன மழை காரணமாக குளத்தில் மழை நீர் பெருமளவில் தேங்கியதால் இந்த ஆண்டு தெப்பஉற்சவம் நடத்த கோவில் உதவி ஆணையர் நற்சோனை தலைமையில் நிர்வாகம் முடிவு செய்தது. இதன்படி 20 க்கு 20 அடி அகலத்தில், தெப்பம் தயாரிக்கப்பட்டது.

தொடர்ந்து நேற்று மாலை அலங்கரிக்கப்பட்ட தெப்பத்தில், உற்சவர் சந்திர சேகரர் – திரிபுர சுந்தரி தாயார் எழுந்தருளி, நீராழி மண்டபத்தை 5 முறை சுற்றி வந்தது. அப்போது குளத்தின் நான்கு புறமும் உள்ள படிக்கட்டுகளில் அமர்ந்திருந்த பக்தர்கள் ஒற்றீயூரா, தியாகேசா, என பக்தி கோஷம் எழுப்பினர்.

மண்டல குழு தலைவர் தி.மு.தனியரசு, பனைமரத் தொழிலாளர் நலவாரிய தலைவர் எர்னாவூர் நாராயணன் மற்றும் ஏராளமான பக்தர்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனர்.

Share this to your Friends