சட்டீஸ்கரில் கேரள கன்னியாஸ்திரிகள் கைதை கண்டித்து கோவையில் துறவியர் பேரவையினர் மனித சங்கிலி
எங்கள் மௌன பேரணி நம்பிக்கையின் அடையாளம், குற்றமற்ற சகோதரிகளை விடுதலை செய்யுங்கள், போன்ற வாசக பதாகைகளுடன் நடைபெற்ற இதில் தமிழ்நாடு சிறுபான்மை ஆணைய தலைவர் ஜோ அருண் பங்கேற்பு
சட்டீஸ்கரில் கேரளாவை சேர்ந்த 2 கன்னியாஸ்திரிகள் கைது செய்யப்பட்டதை கண்டித்து நாடு முழுவதும் பல்வேறு அமைப்பினர் தங்கள் கண்டனங்களை பதிவு செய்து வருகின்றனர் இதன் தொடர்ச்சியாக கோவை மாவட்ட துறவியர் பேரவை சார்பாக கவன ஈர்ப்பு மனித சங்கிலி நடைபெற்றது.
ரேஸ்கோர்ஸ் பகுதியில் நடைபெற்ற இதில்,தமிழ்நாடு சிறுபான்மை ஆணைய தலைவர் ஜோ அருண் மற்றும் ஆணைய உறுப்பினர் முகம்மது ரஃபி ஆகியோர் கலந்து கொண்டனர் இதில் நூற்றுக்கணக்கான அருட் சகோதரிகள் கலந்து கொண்டு, எங்கள் மௌன பேரணி நம்பிக்கையின் அடையாளம், குற்றமற்ற சகோதரிகளை விடுதலை செய்யுங்கள், போன்ற வாசக பதாகைகளுடன் மனித சங்கிலியாக நின்றனர்..
முன்னதாக மாநில சிறுபான்மை ஆணைய தலைவர் ஜோ அருண் செய்தியாளர்களிடம் பேசுகையில்,சட்டீஸ்கரில் கட்டாய மதமாற்றம் செய்ய முயன்றதாக கேரளாவைச் சேர்ந்த மேரி மற்றும் வந்தனா பிரான்சிஸ் ஆகிய கன்னியாஸ்திரிகள் கைது செய்யப்பட்டது நாடு முழுவதும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளதாக கூறிய அவர்,சிறுபான்மையினர் மீதான கும்பல் தாக்குதல்கள் போன்ற சம்பவங்களை அடுத்து தற்போது அரசே கைது செய்வது மிகவும் கண்டத்திற்குரியது என அவர் தெரிவித்தார்…
