எஸ் செல்வகுமார் செய்தியாளர் சீர்காழி

சீர்காழி அருகே போதையை ஒழிப்போம் கல்வியை விதைப்போம் விழிப்புணர்வு மாரத்தான் போட்டி நடைபெற்றது. மயிலாடுதுறை மாவட்டத்தைச் சேர்ந்த 300க்கும் மேற்பட்டோர் பங்கேற்பு

மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அருகே வானகிரி கிராமத்தில் போதையை ஒழிப்போம் கல்வியை விதைப்போம் விழிப்புணர்வு மரத்தான் போட்டி நடைபெற்றது. தர்மகுளத்தில் தொடங்கிய மரத்தான் போட்டியில் மயிலாடுதுறை மாவட்டத்திலுள்ள அனைத்து வயதினரும் பங்கேற்றனர்.

சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை ஆண்கள் பெண்கள் என அனைவரும் கலந்து கொண்ட இந்த மரத்தான் போட்டி தர்மகுளத்தில் தொடங்கி வானகிரி வரை சுமார் நான்கு கிலோமீட்டர் தொலைவிற்கு நடைபெற்றது.

இந்த மராத்தான் போட்டியில் பங்கேற்றவர்கள் போதை பழக்கத்தால் ஏற்படும் தீமைகள் குறித்து பதாகைகள் கையில் ஏந்தியும், போதையை ஒழிப்போம் கல்வியை விதைப்போம் என்ற வாசகங்கள் பொருத்தப்பட்ட டீ சர்ட் கள் அணிந்தும் ஓடினர்.

இந்த மாரத்தான் போட்டியில் ஆண்கள் பெண்கள் என 300 க்கும் மேற்பட்ட அனைத்து வயதினரும் ஆர்வமாக பங்கேற்றனர். இந்த மரத்தான் போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு வானகிரி மீனவ கிராமத்தின் சார்பாக சால்வை அணிவித்து சான்றிதழ்கள் வழங்கப்பட்டன.

Share this to your Friends

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *