புதுச்சேரி, உருளையான்பேட்டை பா.ஜ.க. தொகுதி பொறுப்பாளரும், மோடி மக்கள் சேவை மைய நிறுவனருமான வி.பிரபுதாஸ் அவர்கள், தந்தை B. விக்ரம் நாயுடு நிறுவனர் ஆரிய பவன் குரூப் நினைவு நாளை முன்னிட்டு பொதுமக்களுக்கு 6 இடங்களில் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர்களுக்கு “அன்னதானம்” வழங்கினார்.
உருளையான்பேட்டை சட்டமன்ற தொகுதி பாஜக பொறுப்பாளர் மற்றும் மோடி மக்கள் சேவை இயக்க நிறுவனர் வி.பிரபுதாஸ் அவர்கள், தந்தை B. விக்ரம் நாயுடு
நிறுவனர் ஆரிய பவன் குரூப் நினைவு நாளை முன்னிட்டு”அன்னதானம்” பொதுமக்களுக்கு 6 இடங்களில் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர்களுக்கு “அன்னதானம்” வழங்கினார்.
தொகுதி முழுவதும் ஐந்து வார்டுகளிலும், அண்ணா சாலை, காமராஜர் சாலை, 6 பகுதியாக பிரித்து ஏழை எளிய மக்களுக்கு அன்னதானம் வழங்கினார்கள். இதில் பன்னீர்செல்வம், பாரதிய ஜனதா கட்சி பொறுப்பாளர் கீதா, அசோக், பொன்னியம்மாள், சுமதி, செல்லா என்கிற ஜெயபால், குளத்து மேடு அம்பிகா, சரவணன், சூர்யா, ரமேஷ், ரவி, மற்றும் பலர் கலந்து கொண்டு சிறப்பித்தனர்