செங்கல்பட்டு மாவட்டம் அச்சிறுப்பாக்கம் வடக்கு ஒன்றிய விசிக சார்பில் மதச்சார்பின்மை காப்போம் பேரணி குறித்து விழிப்புணர்வு துண்டறிக்கை விநியோகம்
மதுராந்தகம் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட அச்சிறுப்பாக்கம் வடக்கு ஒன்றியம் சார்பில் எதிர்வரும் ஜூன் 14 அன்று திருச்சியில் தலைவர் எழுச்சி தமிழர் தலைமையில் மதச்சார்பின்மை காப்போம் மாபெரும் மக்கள் எழுச்சி பேரணி குறித்து எலப்பாக்கம் ஊராட்சியில் பஜார் வீதி மற்றும் சந்தை மேடு பகுதியில் சிறு குறு வியாபாரிகள் மற்றும் பொதுமக்களுக்கு ஒன்றிய செயலாளர் தயாநிதி தலைமையில் விக்டர் முன்னிலையில் விநியோகம் செய்யப்பட்டது
இந்த நிகழ்ச்சியில் சிறப்பு அழைப்பாளராக மதுராந்தகம் சட்டமன்ற தொகுதி செயலாளர் பாக்கம் பேரறிவாளன் தொகுதி துணைச் செயலாளர் விடியல் வேலவன் தெற்கு ஒன்றிய செயலாளர் பன்னீர்செல்வம் ஒன்றிய துணைச் செயலாளர் மதன் அன்பழகன் மற்றும் ஒன்றிய நிர்வாகிகள் சந்தோஷ் லோகேஸ்வரன் வழ. சரவணன் புருஷோத்தமன் இமான் பாக்யராஜ் ரமேஷ் சதீஷ் அஜய் சுஜி புஷ்பா ராஜ் ஞானராஜ் அல்ரிக் அன்ஸ்கர் கட்சி நிர்வாகிகள் பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்.