அலங்காநல்லூர்,
மதுரை மாவட்டம் அலங்காநல்லூர் அருகே உள்ள மேலச்சின்னணம்பட்டி கிராமத்தில் அமைந்துள்ள ஸ்ரீ காமாட்சியம்மன் கோவில் வீடு, கற்பகவிநாயகர்,வழிவிடு முருகன் திருக்கோவில் மகா கும்பாபிஷேக விழா நடைபெற்றது.
இரண்டு நாள் நடந்த இந்த பூஜையில் முதல் நாள் கால யாக பூஜையில் கணபதி ஹோமம், மஹா சுதர்சன ஹோமம், விநாயகர் பூஜை, மஹாலக்ஷ்மி பூஜை, கோ பூஜை, உள்ளிட்ட பல்வேறு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றது.
இரண்டாவது நாள் தொடர்ந்து வேத மந்திரங்கள் முழங்க யாகசாலையில் இருந்து கடம் புறப்பாடாகி ராமேஸ்வரம், அழகர்கோவில், உள்ளிட்ட புனித ஸ்தலங்களில் இருந்து கொண்டு கொண்டுவரப்பட்ட புனித நீர் கோவிலை சுற்றி வலம் வந்து பின் கோபுர உச்சிக்கு கொண்டு செல்லப்பட்டு வானத்தில் கருடன் வட்டமிட மேல தாளம் முழங்க கும்ப கலசத்தில் சிவாச்சாரியார்கள் புனித நிர் ஊற்றி மஹா கும்பாபிஷேகம் நடைபெற்றது.
தொடர்ந்து அம்மனுக்கு அபிஷேகமும், தீபாரதனைகளும் நடந்தது. கோவிலுக்கு வருகை தந்த உள்ளூர் மற்றும் வெளியூர் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. விழா ஏற்பாடுகளை ஸ்ரீ முத்துக்கருப்பணசாமி திருக்கோவில் பங்காளிகள் செய்திருந்தனர்..