ஜூன்-5: உலக சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு இன்று பெரம்பலூர் துறையூர் சாலையில் அமைந்துள்ள அரசு மேல்நிலைப்பள்ளியில் “உலகளாவிய நெகிழி பயன்பாட்டை முடிவுக்கு கொண்டு வருதல் ” தொடர்பாக பெரம்பலூர் மாவட்ட வனத்துறை சார்பில் பள்ளி மாணவ மாணவிகளிடையே நெகிழியின் பாதிப்பை குறித்தும் மஞ்சப்பையின் முக்கியத்துவம் குறித்தும் விழிப்புணர்வு ஏற்படுத்தியும் சுற்றுப்புறச் சூழலை பாதுகாப்பு குறித்த உறுதி மொழி ஏற்றும் அனைவருக்கும் மஞ்சப்பை வழங்கப்பட்டது
முன்னதாக உலக சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு பள்ளி மாணவ மாணவிகளிடையே நடத்தப்பட்ட பேச்சு,கட்டுரை, ஓவியப்போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசு மற்றும் பாராட்டு சான்றிதழ்கள் வழங்கி கௌரவிக்கப்பட்டது
இதில் வனத்துறையினர்,பள்ளி தலைமை ஆசிரியர்,இருபால் ஆசிரியர்கள்,மாணவ மாணவிகள் தன்னார்வ தொண்டு அமைப்பினர் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.