மதுரை மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலக வளாகத்தில் மதுரை மாவட்ட இந்தியப்பள்ளி ஆசிரியர் கூட்டமைப்பு சார்பில் திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர், பள்ளி பார்வையின் போது ஆசிரியர்களிடம் தரக்குறைவாக பேசிய நிகழ்வை கண்டித்து மாவட்ட ஒருங்கிணைப்பாளர் பாண்டி தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இந்தியப்பள்ளி ஆசிரியர் கூட்டமைப்பின் பெண் ஒருங்கிணைப் பாளர் எமிமாள் ஞான செல்வி வரவேற்றார். இந்தியப்பள்ளி ஆசிரியர் கூட்டமைப்பின் உறுப்பு சங்கத்தின் மாநில சட்டச் செயலாளர் சபாபதி முன்னிலை வைத்தார்.
திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் மாவட்டத்தில் பள்ளி பார்வையின் போது ஆசிரியர்களை நீங்கள் ஆசிரியர் பணிக்கு லாயக் கில்லை என்பது உள்ளிட்ட வார்த்தைகளால் தரம் தாழ்த்தி பேசிய நிகழ்வினை திரும்ப பெற வலியுறுத்தி யும் பொது வெளியில் வருத்தம் தெரிவிக்க வலியுறுத்தியும் மதுரை மாவட்ட இந்தியப்பள்ளி ஆசிரியர் கூட்டமைப்பின் உறுப்புச்சங்க நிர்வாகிகளான சந்திரன், ஜவஹர்லால் நேரு, ராஜசேகர், இந்திரா காந்தி, கணேசன், கார்த்திக், ராஜரத்தினம், பாஸ்கர், தீனன் கண்டன உரை ஆற்றினர். தோழமைச் சங்க நிர்வாகிகளான சந்திரபோஸ், தமிழ் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர்.
இந்தியப்பள்ளி ஆசிரியர் கூட்டமைப்பின் மாவட்ட நிதிக் காப்பாளர் சீனிவாசன் நன்றி கூறினார். கண்டன ஆர்ப்பாட்டத்தில் திருவள்ளூர் மாவட்ட ஆட்சியரை கண்டித்து கண்டன முழக்கங்கள் எழுப்பப்பட்டன. கண்டன ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து ஆசிரியர்கள் திரளாக கலந்து கொண்டனர்.