பாபநாசம் செய்தியாளர்
ஆர்.தீனதயாளன்

தஞ்சை மாவட்டம் பாபநாசம் தெற்கு ஒன்றியம் சார்பில் முன்னாள் முதல்வர் கலைஞர் கருணாநிதியின் 102 வது பிறந்த நாளை முன்னிட்டு கலைஞரின் திருவுருவ படத்திற்கு மாலை அணிவித்து மருத்துவமனைகளில் தாய்மார்களுக்கு பிரட் ,பால் இனிப்புகள் வழங்கி கொண்டாட்டம்……

தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசம் தெற்கு ஒன்றிய திமுக சார்பில் மறைந்த முன்னாள் முதலமைச்சர் கலைஞரின் 102 வது பிறந்த நாள் கொண்டாட்டம் தெற்கு ஒன்றிய செயலாளர் நாசர் தலைமையில் நடைபெற்றது.

நிகழ்ச்சியில் பேரூர் அலுவலகம் முன்பு கலைஞரின் திருவுருவ படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தி ,பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கினர்.

அதனைத் தொடர்ந்து பண்டாரவாடை, சக்கராப்பள்ளி , வீரமாங்குடி, உள்ளிட்ட பகுதிகளில் திமுக கழக கொடியேற்றி வைத்து மருத்துவமனைகளில் தாய்மார்களுக்கு பிரட், பால் உள்ளிட்டவற்றை வழங்கினர்.

இதில் மாவட்ட துணைச் செயலாளர்கள் கோவி.அய்யாராசு, துரைமுருகன் பேரூர் செயலாளர் கபிலன் மற்றும் பாபநாசம் தெற்கு ஒன்றிய பேரூர் ,நகர, மாவட்ட நிர்வாகிகள், சார்பணி நிர்வாகிகள் என பலர் கலந்து கொண்டனர்.

Share this to your Friends

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *