எஸ் செல்வகுமார் செய்தியாளர் சீர்காழி
சீர்காழி அருகே சூரக்காடு உப்பனாற்றில் அரசு பேருந்து கவிழ்ந்து ஓட்டுனர், நடத்துனர், உட்பட 8 பேர் காயம்.
மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி பேருந்து நிலையத்தில் பயணிகளை ஏற்றிக்கொண்டு நாகப்பட்டினம் நோக்கி அரசு பேருந்து புறப்பட்டு சென்றது.
சீர்காழி அருகே சூரக்காடு தேசிய நெடுஞ்சாலையில் சென்ற போது எதிர்பாராத விதமாக சாலையோரம் இருந்த உப்பனாற்று வடிகால் வாய்க்கலில் அரசு பேருந்து கவிழ்ந்து விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் அரசு பேருந்து ஓட்டுநர் சுரேஷ் (34) ,நடத்துனர் சிங்கராயர்,பயணிகள் பாஸ்கர் உட்பட 8 பேர் காயம் அடைந்தனர்.
காயம் அடைந்தவர்களை தீயணைப்புத் துறையினர் மற்றும் 108 ஆம்புலன்ஸ் மூலம் மீட்கப்பட்டு சீர்காழி அரசு மருத்துவமனையில் சேர்த்து சிகிச்சைக்காக அனுப்பி வைக்கப்பட்டனர்.அங்கு லேசான காயம் அடைந்தவர்கள் சிகிச்சை பெற்று வீடு திரும்பினார் மற்றவர்கள் மருத்துவமனையில் உள் நோயாளியாக சேர்க்கப்பட்டு சிகிச்சை பெறுகின்றனர்
இந்த விபத்து குறித்து சீர்காழி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்