தா.பேட்டையில் புதிதாக வட்டார கல்வி அலுவலர்கள் பொறுப்பேற்பு
தமிழ்நாடு ஆசிரியர் முன்னேற்ற சங்கத்தினர் வாழ்த்து
திருச்சி
திருச்சி மாவட்டம் முசிறி கல்வி மாவட்டத்திற்கு உட்பட்ட தா.பேட்டை ஒன்றியத்தில் அமைந்துள்ள வட்டார கல்வி அலுவலத்திற்கு புதிய வட்டார கல்வி அலுவலர்களாக ஜோதிலட்சுமி மற்றும் சேகர் ஆகியோர் தா.பேட்டை வட்டார கல்வி அலுவலராக பொறுப்பேற்று கொண்டனர்.
இந்நிகழ்வில் புதிதாக பொறுப்பேற்றுக் கொண்ட வட்டார கல்வி அலுவலர்களுக்கு தமிழ்நாடு ஆசிரியர் முன்னேற்ற சங்கத்தின் சார்பில் மாவட்ட ஒருங்கிணைப்பாளர் வை.விஜயகுமார் தலைமையில் மரியாதை நிமித்தமாக சந்தித்து சால்வை அணிவித்து புத்தகம் வழங்கி வரவேற்று வாழ்த்துக்களை தெரிவித்துக் கொண்டனர்.
இந்நிகழ்வில் வட்டார தலைவர் பெ.நல்லதம்பி, வட்டார செயலாளர் சே.விஜயகுமார்,செந்தில்குமார் (இ.நி.ஆ), சக்திவேல் (இ.நி.ஆ),இந்திரா (த.ஆ),கலைச்செல்வி (த.ஆ), ந.செல்வி (த.ஆ),குணமதி (த.ஆ),சாந்தி (த.ஆ)
ஆகியோர் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.
வெ.நாகராஜீ
திருச்சி மாவட்ட செய்தியாளர்