திருப்பூர் மாவட்டம் தாராபுரம் செய்தியாளர்
பிரபு செல்:9715328420
கோவில் உண்டியலை திருடிச் சென்ற மர்ம நபருக்கு போலீசார் வலை வீச்சு.
திருப்பூர் மாவட்டம் தாராபுரம் அருகே உள்ள வேங்கிபாளையம். மல்லீஸ்வரன்சிவன் கோவிலுக்குள் புகுந்த மர்ம நபர், கோவில் உண்டியலை பணத்துடன் திருடி சென்றார். இதுகுறித்து, குண்டடம் போலீசார் விசாரிக்கின்றனர்.
வேங்கிபாளையம் பகுதியில், பிரசித்தி பெற்ற மல்லீஸ்வரன் சிவன் கோவில் கோவில் உள்ளது. இக்கோவிலில், தினசரி காலை, மாலை பூஜைகள் நடத்தப்படுகிறது வழக்கம்போல் காலை பூஜையை முடித்து விட்டு, கோவில் உண்டியலை அங்குள்ள ஒரு அறையில் வைத்து பூட்டிவிட்டு, கோவிலுக்கு வரும் பக்தர்கள் சாமி கும்பிடுவதற்காக பூசாரி தண்டபாணி வயது 65 கோவில் நடை திறந்து வைத்து விட்டு. வீட்டிற்கு சென்றுள்ளார்.
அப்போது கோவில் திறக்கப்பட்ட இருப்பதால் சாவியும் பூட்டையும் கோவிலின் சுவர் மீது பூசாரி வைத்துள்ளார்.
இதனை நோட்டம் பார்த்துக் கொண்டிருந்த மர்ம நபர் ஒருவர் பூசாரி இல்லாத நேரத்தில் கோவிலுக்குள் சென்று பணத்துடன் இருந்த கோவில் உண்டியலை திருடிக் கொண்டு மாயமானார். பூசாரி மீண்டும் கோயிலுக்கு வரும்போது கோவிலில் வைக்கப்பட்டிருந்த உண்டியல் காணாமல் இருந்துள்ளது. இதனால் அதிர்ச்சி அடைந்த பூசாரி அக்கம் பக்கத்தில் உள்ளவர்களை விசாரித்துள்ளார் அப்போது யாரும் கோயிலுக்கு வரவில்லை என தெரிவித்துள்ளனர்.
இதனை அடுத்து கோவில் உண்டியலை யாரோ ஒரு மர்ம நபர் உண்டியல் உடன் பணத்தை திருடி சென்று விட்டார் என உணர்ந்த பூசாரி குண்டடம் காவல் நிலையத்திற்கு அலைபேசி மூலம் தகவல் தெரிவித்தார் தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு நேரில் வந்த போலீசார் பூசாரி தண்டபாணி இடம் விசாரணை மேற்கொண்டனர்.
அப்போது தேவாங்கா செட்டியார் சமுதாயத்திற்கு சொந்தமான கோவில் எனவும் கடந்த ஏழு வருடங்களாக இந்த கோவிலில் பூசாரிக வேலை செய்து வருவதாகவும் மேலும் கோவிலுக்கு எதிரே 100 மீட்டர் தொலைவில் கோவிலுக்கு சொந்தமான மண்டபத்தில் பூசாரி தங்கி காலை,மாலை இரு வேலை பூஜை செய்து வந்ததாகவும் வழக்கம் போல இன்று காலை 9:00 மணிக்கு பூஜை செய்துவிட்டு நடையை திறந்து வைத்து விட்டு சென்றதாகவும் உண்டியலை சிலையின் முன்னாடி வைத்து விட்டு கதவை யாரேனும் வந்தால் வழிபட வேண்டி திறந்து வைத்துவிட்டு சென்றதாகவும் இன்று மீண்டும் 4- மணி பூஜைக்கு கோவிலை வந்து பார்க்கும் போது உள்ளே இருந்த உண்டியல் காணாமல் போய்விட்டதாக தெரிவித்தார்.
மூன்று மாதங்களுக்கு ஒரு முறை உண்டியலை திறந்து பணம் எடுத்து கோயிலின் பணிக்காக செலவு செய்து வந்ததாகவும். கடந்த ஒரு மாதமாக உண்டியலில் பணம் இருந்ததாகவும் சுமார் 10,000 வரை இருந்திருக்கும் என பூசாரி போலீசாரிடம் தெரிவித்தார். இதனை அடுத்து போலீசார் திருப்பூர் கைரேகை நிபுணர்கள் மற்றும் மோப்ப நாய்களை வரவழைத்து யார்? எடுத்துச் சென்றார்கள் திருடி சென்ற மர்ம நபர் யார்? என விசாரணை நடத்தி வருகின்றனர் கோவிலின் உண்டியலை பணத்துடன் திருடி சென்ற சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.