திருவாரூர் மாவட்டம் வலங்கைமான் ஒன்றியம் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் கொட்டையூர் கிளை 6- வது மாநாடு கொட்டையூர் வடக்கு தெருவில் விவசாய சங்க ஒன்றிய செயலாளர் சின்னராசா தலைமையில் நடைபெற்றது. என் .பாலையன் மறைந்த முன்னாள் நிர்வாகிகளுக்கு அஞ்சலி தீர்மானங்களை நிறைவேற்றினார். தமிழ் மாநில விவசாய தொழிலாளர் சங்க மாவட்ட செயலாளர் கு. ராஜா மாநாட்டை துவக்கி வைத்தார்.
இன்றைய அரசியல் நிலைகளையும், எதிர்கால அரசியல் நிலைகளையும் பற்றி பேசினார். மாநாட்டு கொடியை இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் வலங்கைமான் ஒன்றிய செயலாளர் எஸ்.எம். செந்தில்குமார் ஏற்றி வைத்து, பொறுப்பாளர்களை அறிவித்தும், மாநாட்டு கோரிக்கைகளை விளக்கியும் பேசினார்.
மாதர் சம்மேளன மாநிலக் குழு உறுப்பினர் தமிழ்செல்வி ராஜா, முன்னாள் வி.தொ.ச மாநிலக் குழு உறுப்பினர் முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் கே. நாகராஜன் அவர்களின் திருவுருவ படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
நிகழ்ச்சியில் விவசாய தொழிலாளர் சங்க ஒன்றிய செயலாளர் ரவி, மாணவப் பெருமன்ற மாவட்ட குழு உறுப்பினர் பேராசிரியர் ஆறுமுகம், ஒன்றிய குழு உறுப்பினர்கள் ஜீவானந்தம், தேசிங்கு, சண்முகம், இளைஞர் பெருமன்றம் ஒன்றிய பொருளாளர் ஸ்ரீகாந்த், புதிய பொறுப்பாளர்கள் கிளை செயலாளர் கே.எஸ். விஜயகுமார், துணை செயலாளர் என். பாலையன், பொருளாளர் கே. வீரவேல் ஆகியோர் கலந்து கொண்டனர். மாநாட்டில் 01. கிராம நிர்வாக அலுவலகம் கட்டித்தர வேண்டும்.02. ஊராட்சி மன்ற அலுவலகம் கட்டித்தர வேண்டும்,03. வெண்ணாற்றில் படித்துறை கட்டித்தர வேண்டும்,04. பாப்பான் குளத்தில் வடிகால் அமைத்து தர வேண்டும், 06. தொடக்கப் பள்ளியினை உயர்நிலைப் பள்ளியாக தரம் உயர்த்த வேண்டும். என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை தீர்மானமாக நிறைவேற்றப்பட்டன. முடிவில் இளைஞர் பெருமன்ற ஒன்றிய துணைத்தலைவர் சி.விஜய் அனைவருக்கும் நன்றி கூறினார்.