துறையூர்
திருச்சி மாவட்டம் துறையூர் திருச்சி ரோட்டில் உள்ள ஆர்த்தி திருமண மஹாலில் 29/05/2025 அன்று கிழக்கு ஒன்றிய திமுக சார்பில் ஒன்றிய செயலாளர் சிவ சரவணன் தலைமையில் சொரத்தூர், குன்னுப்பட்டி ,நடுவலூர், நாகலாபுரம், கீரம்பூர் ஆகிய ஊராட்சிளை சேர்ந்த பாக நிலை முகவர்கள் (பிஎல்ஏ2), பாக குழு உறுப்பினர்கள் (பிஎல்சி) ஆய்வு கூட்டம் நடைபெற்றது.

இக்கூட்டத்தில் சட்டமன்றத் தொகுதி பொறுப்பாளர் தங்க கமல் கலந்து கொண்டு, 234க்கு 200 சட்டமன்றத் தொகுதியில் திமுக வெற்றி பெற்று ஆட்சி அமைக்க பாக நிலை முகவர்கள்,பாக குழு உறுப்பினர்கள் பாடுபட வேண்டும். வாக்காளர்களிடம் நான்கு ஆண்டு திமுக ஆட்சியில் செய்த சாதனைகள் மற்றும் நலத்திட்டங்களை எடுத்துக் கூற வேண்டும் கேட்டுக்கொண்டார்.

இதில் சட்டமன்ற உறுப்பினர் செ.ஸ்டாலின் குமார்,மாவட்ட பொருளாளர் தர்மன் ராஜேந்திரன் (முன்னாள் மாவட்ட சேர்மன்), நகர செயலாளர் மெடிக்கல் முரளி,மத்திய ஒன்றிய செயலாளர் அண்ணாதுரை, மேற்கு ஒன்றிய செயலாளர் வீரபத்திரன்,கலை இலக்கிய பகுத்தறிவு பேரவை தலைவர் கஸ்டம்ஸ் மகாலிங்கம் , வழக்கறிஞர்கள் அணி மாவட்ட அமைப்பாளர் நரேஷ் குமார், விளையாட்டு அணி மாவட்ட அமைப்பாளர் சுரேஷ்குமார், முன்னாள் ஒன்றிய சேர்மன் சரண்யா மோகன்தாஸ், பொது குழு உறுப்பினர் கிட்டப்பா, மாவட்ட ஐடி அமைப்பாளர் சேகர்,ஒன்றிய பொருளாளர் நடுவலூர் ஜெயராமன், மாவட்ட பிரதிநிதிகள் நடுவலூர் செல்வகுமார், முருகேசன், சுபாஷ் மற்றும் கிளை பிரதிநிதி உமாபதி ,குன்னுப்பட்டி செல்வராஜ் மற்றும் மாணவர் அணி துணை அமைப்பாளர் பிரபாகரன் ஒன்றிய அவைத் தலைவர் நடராஜன் மற்றும் கிழக்கு ஒன்றிய இளைஞரணி அமைப்பாளர் சுமன், துணை அமைப்பாளர்கள் சத்தியத்தேவன், தென்னரசு ,தமிழழகன், ராஜ்குமார், பூபதி, விஜயகுமார் ,ஆதனூர் ரவிச்சந்திரன்,ஷேக் முகமது ,கிழக்கு ஒன்றியத்திற்கு உட்பட்ட சொரத்தூர், குன்னுப்பட்டி, நடுவலூர், நாகலாபுரம், கீரம்பூர் ஆகிய பகுதிகளை சேர்ந்த திமுக நிர்வாகிகள், பாக நிலை முகவர்கள் கலந்து கொண்டனர்.

வெ.நாகராஜீ
திருச்சி மாவட்ட செய்தியாளர்

Share this to your Friends

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *