செங்கல்பட்டு மாவட்டம் மேல்மருவத்தூர் அருகே உள்ள அற்புத சகாய அன்னை ஆலய
33 ஆம் ஆண்டு பெருவிழா வெகு விமர்சையாக நடைபெற்றது.
வேலாமூர் கிராமம் அற்புத சகாய அன்னை ஆலயம் செங்கை மறை மாவட்டம் எலப்பாக்கம் பங்கு 33ஆம் ஆண்டு ஆலய பெருவிழாக் கொண்டாட்டம் திருக்கொடி பவனி கூட்டுத் திருப்பலி கொடியேற்றம் நடைபெற்றது.
இவ்விழாவில் பேரருள் தந்தை பா.எஸ்தாகியூஸ் முதன்மை குரு செங்கை மறை மாவட்டம் ஆகியோரின் தலைமையில் கொடியேற்றப்ட்டது.இதில் அருட்பணி ஜேக்கப்
பங்கு தந்தை எலப்பாக்கம் இணைந்து வேலாமூர் புதிய இடத்தில் ஆரம்பித்து ஊர்வலமாக சென்று ஆலயம் வந்தடைந்தது அருட்சகோதரி சின்னராணி,டெய்சி, டோமினிக்,அசோக், திவ்யநாதன், கிரேசி, அலெக்ஸ்சாண்டர், நிர்மலா மேரி பவுல் தவமணி, ஜான்பீட்டர்,சகாயம், மற்றும் விழாக் குழுவினர் என நூற்றுக்கணக்கானோர்
கலந்து கொண்டு விழாவை சிறப்பித்தனர்.