காரைக்கால் மாவட்டத்திலிருந்து புனித ஹஜ் பயணம் செல்கின்ற இஸ்லாமியர்களை வழி அனுப்பும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் 200க்கு மேற்பட்ட இஸ்லாமியர்கள் கலந்து கொண்டு வழி அனுப்பி வைத்தனர்.
இஸ்லாமியர்கள் அவர்களது ஐந்து கடமைகளில் ஒன்றான ஹஜ் பயணம் ஆண்டுதோறும் மேற்கொள்வது வழக்கம். அந்த வகையில் புதுச்சேரி மாநில ஹஜ் கமிட்டி சார்பில் இந்த ஆண்டு 90 இஸ்லாமியர்கள் ஹஜ் பயணம் செல்கின்றனர்.
இந்த நிலையில் புதுச்சேரி மாநிலம் காரைக்கால் மாவட்டத்திலிருந்து புதுச்சேரி மாநில ஹஜ் கமிட்டி சார்பில் ஹஜ் பயணம் மேற்கொள்ளும் 28 இஸ்லாமியர்களை வழி அனுப்பும் நிகழ்ச்சி காரைக்கால் பெரிய பள்ளிவாசல்களில் புதுச்சேரி மாநில ஹஜ் கமிட்டி தலைவர் இஸ்மாயில் முன்னிலையில் நடைபெற்றது.
அப்பொழுது காரைக்கால் பெரிய பள்ளிவாசலில் சிறப்பு தொழுகை நடைபெற்று புனித ஹஜ் பயணம் மேற்கொள்ளும் இஸ்லாமியர்களை வழி அனுப்பி வைத்தனர். இந்த நிகழ்ச்சியில் சட்டமன்ற உறுப்பினர்கள் நாஜிம், நாக தியாகராஜன் மற்றும் 200க்கும் மேற்பட்ட இஸ்லாமியர்கள் கலந்து கொண்டனர்.
மேலும் அஜ் பயணம் செல்பவர்களுக்கு கடந்த ஆண்டு 15,000 ரூபாய் புதுச்சேரி அரசு வழங்கியது. இதில் தமிழ்நாட்டில் இம்முறை 25000 வழங்கப்படுவது போல் புதுச்சேரி மாநிலத்திலும் வழங்க அஜி கமிட்டி தலைவர் இஸ்மாயில் புதுச்சேரி முதல்வர் ரங்கசாமியிடம் வலியுறுத்தியுள்ளார்.