எஸ் செல்வகுமார் செய்தியாளர் சீர்காழி
கொள்ளிடம் கடைவீதியில் தீண்டாமை ஒழிப்பு முன்னணி சார்பாக சாதி வாரி கணக்கெடுப்பு நடத்த கோரி கோரிக்கை முழுக்க போராட்டம்
மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அடுத்த கொள்ளிடம் கடைவீதியில் தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணி சார்பாக கோரிக்கை முழக்க போராட்டம் நடைபெற்றது. தீண்டாமை ஒழிப்பு முன்னணி மாவட்டத் தலைவர் விஜய் தலைமையில் நடைபெற்ற கோரிக்கை முழக்கப் போராட்டத்தில் ,மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாவட்ட செயலாளர் சீனிவாசன், மாநில இணைச்செயலாளர் வாஞ்சிநாதன் உள்ளிட்டோர் கலந்து கொண்டுகோரிக்கை முழக்கங்களில் ஈடுபட்டனர்.
சாதிவாரி கணக்கெடுப்பு உடனடியாக நடத்த கோரியும், தனியார் துறையில் இட ஒதுக்கீடு Thursday வழங்க கோரி கோரிக்கை முழக்கம் போராட்டம் நடைபெற்றது.50க்கும் மேற்பட்டோர் இந்த கோரிக்கை முழக்கப் போராட்டத்தில் கலந்து கொண்டனர்.