துறையூர்
திருச்சிராப்பள்ளி மாவட்டம், துறையூர் வட்டம், முத்தையம்பாளையம் கிராமத்தில் நடைபெற்ற,”உங்களை தேடி உங்கள் ஊரில்”திட்ட முகாமில் முத்தையம்பாளையம் கிராம ஊராட்சி அலுவலகம், அம்மாப்பட்டியில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தின் கீழ் நாற்றாங்கால் உற்பத்தி செய்யும் இடத்தினை நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்து நாற்றாங்கால் உற்பத்தி செய்வது தொடர்பான விபரங்கள் குறித்து அலுவலர்களிடம் கேட்டறிந்தார்.
மேலும், அம்மாப்பட்டி நியாயவிலைக்கடையில் குடும்ப அட்டைதாரர்களுக்கு வழங்கப்படும் உணவுப் பொருட்களின் தரம் மற்றும் அளவுகள் குறித்தும், பொருட்களின் இருப்புக் குறித்த பதிவேடுகளையும் ஆய்வு செய்தார்.
தொடர்ந்து, அம்மாப்பட்டி நூலகத்தை நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்து, உட்கட்டமைப்பு வசதிகள், அங்கு வைக்கப்பட்டுள்ள புத்தகங்களின் எண்ணிக்கை உள்ளிட்டவற்றை பார்வையிட்டு, அங்குள்ள பணியாளரிடம் நூல்கள் மற்றும் நூலகத்தின் செயல்பாடுகள் குறித்தும், நூலகத்திற்கு வருபவர்களின் எண்ணிக்கை குறித்தும் கேட்டறிந்தார்.
இதனைத்தொடர்ந்து, சிவாலயா திருமண மண்டபத்தில் நடைபெற்ற முகாமில் பொதுமக்களிடமிருந்து பல்வேறு துறைகளின் சார்பில் கோரிக்கை மனுக்களை மாவட்ட ஆட்சித்தலைவர் பெற்று மனுக்கள் மீது உடனடி நடவடிக்கை மேற்கொள்ள சம்மந்தப்பட்ட துறைகளுக்கு அறிவுறுத்தினார்.
அதன்படி இம்முகாமில், வருவாய் துறையின் சார்பில் சிறப்பு வரன் முறைபடுத்தும் திட்டத்தின் கீழ் ரூபாய் 19.49 இலட்சம் மதிப்பீட்டில் 21 பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளும், 271 பயனாளிகளுக்கு ரூபாய் 16.26 இலட்சம் மதிப்பீட்டில் நத்தம் பட்டாக்களும், 07 பயனாளிகளுக்கு ரூபாய் 4.20 இலட்சம் மதிப்பீட்டில் நத்தம் பட்டா நகலும், 04 பயனாளிகளுக்கு ரூபாய் 2.40 இலட்சம் மதிப்பீட்டில் இலவச வீட்டுமனைப் பட்டாக்களும், ஊரக வளர்ச்சித்துறையின் சார்பில் 04 பயனாளிகளுக்கு கலைஞரின் கனவு இல்லம் திட்டத்தின் கீழ் ரூபாய் 12.40 இலட்சம் மதிப்பீட்டில் வீடுகட்டுவதற்கான ஆணையும், வேளாண்மைத்துறையின் சார்பில் மாநில வேளாண் வளர்ச்சி திட்டத்தின் கீழ் ரூபாய் 1,750 மதிப்பீட்டில் 07 பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளும், கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சித் திட்டத்தின் மூலம் ரூபாய் 4,150 மதிப்பீட்டில் 02 பயனாளிகளுக்கு பேட்டரி தெளிப்பான்களும், சமூக பாதுகாப்பு திட்டத்தின் சார்பில் ரூபாய் 72 ஆயிரம் மதிப்பீட்டில் 06 பயனாளிகளுக்கு விதவை உதவித் தொகையும், 01 பயனாளிக்கு ரூபாய் 14,400 மதிப்பீட்டில் முதியோர் உதவித் தொகையும், உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத்துறையின் சார்பில் 10 பயனாளிகளுக்கு புதிய குடும்ப அட்டைகளையும் என மொத்தம் 333 பயனாளிகளுக்கு ரூபாய் 2 கோடி மதிப்பீட்டில் அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது.
இந்நிகழ்வுகளில், துறையூர் சட்டமன்ற உறுப்பினர் செ.ஸ்டாலின் குமார், மாவட்ட வருவாய் அலுவலர் ர.ராஜலட்சுமி, மகளிர் திட்ட அலுவலர் சுரேஷ், முசிறி கோட்டாட்சியர் ஆரமுத தேவசேனா,வட்டாட்சியர் மோகன்,தனி வட்டாட்சியர் ரமேஷ்,தலைமையிடத்து துணை வட்டாட்சியர் ஐயப்பன், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் சரவணகுமார், ரவிச்சந்திரன்,மண்டலத் துணை வட்டாட்சியர்கள் விஜய், ராஜேந்திரன் ,வருவாய் ஆய்வாளர் இளவரசி,முத்தியம்பாளையம் கிராம நிர்வாக அலுவலர் வசந்தமலர், செயலர் சாமிவேலு,நகராட்சி ஆணையர் சுரேந்திரஷா உள்ளிட்ட அரசுத்துறை அலுவலர்கள் மற்றும் நகர்மன்ற தலைவர் செல்வராணி மலர்மன்னன்,
முன்னாள் மாவட்ட சேர்மன் தர்மன் ராஜேந்திரன், நகர செயலாளர் மெடிக்கல் முரளி, ஒன்றிய செயலாளர்கள் வீரபத்திரன்,சிவ சரவணன் மற்றும் பொதுமக்கள் கலந்துகொண்டனர்.
வெ.நாகராஜீ
திருச்சி மாவட்ட செய்தியாளர்