பாபநாசம் செய்தியாளர்
ஆர்.தீனதயாளன்
தஞ்சை மாவட்டத்தில் பாபநாசத்தில் தென்னகப் பண்பாட்டு மையம் சார்பில் சலங்கை நாதம் நடன இரண்டாம் நாள் நிகழ்ச்சி திரளானோர் கண்டுகளித்தனர்.
தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி வளாகத்தில் தஞ்சாவூர் தென்னகப் பண்பாட்டு மையம் சார்பில் 2 நாள் சலங்கை நாதம் நடன நிகழ்ச்சி நடைபெற்றது விழாவில் பீகார், மகாராஷ்டிரா, ஜார்கண்ட், கேரளா, ராஜஸ்தான், காரைக்கால்,தமிழ்நாடு உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த நடன கலைஞர்கள் பங்கேற்று தலைச்சிறந்த நடன நிகழ்ச்சிகள் நடைபெற்றது.
இந்நிகழ்ச்சியில் பாபநாசம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதியில் இருந்து ஏராளமானோர் பங்கேற்று நடன நிகழ்ச்சியை கண்டுகளித்தனர் .