அன்னதானம்” ராகவி சினி ஆர்ட்ஸ் சார்பிலும், லியானா குரூப்ஸ் சார்பிலும் இணைந்து எஸ்.டி.சுப்பிரமணியன், கருங்காலக்குடி சந்துரு, திண்டுக்கல் தேவி அவர்களின் நல்லாசியுடன் திரைப்பட இயக்குனரும், நடிகரும், தென்னிந்திய நடிகர் சங்க உறுப்பினரும், சமூக சேவகருமான சேவா ரத்னா டாக்டர் ஜெ.விக்டர் தலைமையில் மதுரை கள்ளழகர் திருவிழாவையொட்டி கோரிப்பாளையம், ஜம்புரோபுரம் மார்க்கெட், தமுக்கம் ஆகிய இடங்களில் லட்டு, புளியோதரை, சுண்டல் 501 நபர்களுக்கு வழங்கப்பட்டது. விழாவில் நடிகர் மீசை மனோகரன், வசன கர்த்தாவும், நடிகருமான அப்பா பாலாஜி, எழுத்தாளர் விவேக் ராஜ், மேக்கப் ஆர்ட்டிஸ்டும் நடிகையுமான அங்கிதா, குழந்தை நட்சத்திரம் ரிஷிதா, லியானா மற்றும் நடிகர்கள், நடிகைகள் அனைவரும் கலந்து கொண்டனர்.