தருமபுரி பேருந்து நிலையத்தில் தமிழ்நாடு மாசு கட்டுப்பாடு வாரியம் சார்பில் ஒருமுறை பயன்படுத்தும் நெகிழி பயன்பாட்டை முற்றிலும் தவிர்த்து துணிப்பைகளை மீண்டும் பயன்படுத்த வேண்டும் என்பதை வலியுறுத்தி பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக ”மீண்டும் மஞ்சப்பை” விழிப்புணர்வு இயக்கத்தின் கீழ் விழிப்புணர்வு துண்டு பிரசுரங்களை மாவட்ட ஆட்சித்தலைவர், ரெ.சதீஸ், வழங்கினார்கள்.

உடன் தருமபுரி நகர்மன்ற தலைவர், லட்சுமி நாட்டான் மாது, தருமபுரி நகராட்சி ஆணையாளர் திரு.சேகர், மாசு கட்டுப்பாட்டு வாரிய செயற்பொறியாளர்,உதயகுமார், நகர் நல அலுவலர்,இலட்ஷிய வர்ணா மற்றும் அரசுத்துறை அலுவலர்கள், பொதுமக்கள் கலந்துகொண்டனர்.

Share this to your Friends

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *