வக்பு வாரியத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து தமிழக வெற்றி கழகத்தினர் அடையாள மத்திய அரசுக்கு எதிராகவும் வகுப்புவாரிய சட்டத்தை திரும்ப பெற வேண்டும் என்று பதாகைகளை ஏந்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
கோவை புறநகர் சூலூரில் உள்ள அண்ணா சீரணி கலையரங்கம் முன்பு தமிழக வெற்றி கழகத்தினர் வகுப்பு வாரிய சட்டத்திருத்த மசோதாவுக்கு எதிர்ப்பு தெரிவித்து அடையாள ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். மாவட்ட செயலாளர் பாபு தலைமையில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில், வகுப்பு வாரிய சட்டத்தை நிராகரிப்போம், வகுப்பு வாரிய சட்டத்தை திரும்ப பெற வேண்டும், வகுப்பு வாரிய சட்டம் சிறுபான்மை மக்களுக்கு எதிரானது போன்ற பதாகைகளை ஏந்தி மத்திய அரசை கண்டித்து கோஷங்களை எழுப்பினர்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய மாவட்ட செயலாளர் பாபு, சிறுபான்மை மக்களுக்கு எதிராக கொண்டு வரப்பட்ட இந்த சட்டம் மக்களை பாதிக்கும் வகையில் உள்ளது. சிறுபான்மை மக்கள் அல்லாத நபரை வகுப்பு வாரியத்திற்கு தலைவராக நியமித்திருப்பது கண்டிக்கத்தக்கது. மத்திய அரசு உடனடியாக இந்த சட்டத்தை திரும்ப பெற வேண்டும் என்று தெரிவித்தார். இந்த ஆர்ப்பாட்டத்தில் 500-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.