பொருளாதாரத்தில் பின்தங்கிய 25 மாணவர்கள் கோவையில் இருந்து விமான மூலம் சென்னை விமான நிலையம் வருகை

கோவையில் உள்ள டான் போஸ்கோ அன்பு இல்லத்தில் இருந்து பொருளாதாரத்தில் பின்தங்கிய 25 மாணவர்களை ரவுண்டு டேபிள் அமைப்பைச் சேர்ந்த தனியார் அமைப்பினர் மாணவர்களின் கனவுகளை நிறைவேற்றும் வகையில் 25 மாணவர்களை முதல்முறையாக விமானத்தில் அழைத்து வந்தன கோவையிலிருந்து விமான மூலம் சென்னை விமான நிலையம் வந்தடைந்த அவர்களை சென்னை விமான நிலையத்தில் இருந்து பிர்லா கோளரங்கம் உள்ளிட்ட பல்வேறு இடங்களுக்கு கல்வி சுற்றுலாவாக அழைத்துச் செல்கின்றனர் இதனை தொடர்ந்து இன்று மாலை மீண்டும் கோவைக்கு விமானத்தில் அழைத்து செல்ல இருப்பதாகவும் தகவல் தெரிவித்ததும் குறிப்பிடத்தக்கது மேலும் மாணவர்களிடம் கேட்டபோது முதல் முறையாக விமானத்தில் வந்தது மிகவும் மகிழ்ச்சியாக இருந்தது என்றும் விமானத்தில் வரும் பொழுது மேகக் கூட்டங்களை நேரடியாக அருகில் காண்பது மிகவும் மகிழ்ச்சியாக இருந்தது என்றும் தனது கனவுகள் நிறைவேற்றும் வகையில் விமானத்தில் அழைத்து வந்தது நன்றி என்றும் தெரிவித்ததும் குறிப்பிடத்தக்கது.

Share this to your Friends

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *