அரியலூர் ரயில் நிலையத்தில் பயணி ஒருவரிடம் 77 லட்சம்‌ ரூபாய் ஹவாலா பணம்‌ பறிமுதல் திருச்சி வருமான வரித்துறை அலுவலர்கள் பிடிபட்ட
நபரிடம் விசாரணை…

அரியலூர் ரயில் நிலையத்தில் நேற்று இரவு திருச்சி நோக்கி சென்ற ஹவுரா எக்ஸ்பிரஸ் ரயிலில் இருந்து இறங்கிய பயணிகளிடம் ரயில்வே போலீசார் சோதனை நடத்தினர். அப்போது பயணி ஒருவரின் கையில் இருந்த பையை போலீசார் சோதனை செய்தனர். அந்தப் பையன் 500 ரூபாய் நோட்டுகள் கட்டு கட்டாக இருந்துள்ளது.

ரயில்வே போலீசார் அவரிடம் மேற்கொண்ட விசாரணையில் அவரிடம் பணம் எடுத்து வந்ததற்கான ஆவணங்கள் எதுவும் இல்லை. அவரிடம் சுமார் 75 லட்சத்திற்கு மேல் பணம் இருந்ததால் ரயில்வே போலீஸ் உடனடியாக திருச்சி வருமானவரித்துறை அலுவலர்களுக்கு தகவல் அளித்தனர்.

அந்த நபரிடம் ரயில்வே போலீஸ் விசாரணை மேற்கொண்ட போது, அவர் பெரம்பலூர் மாவட்டம் மேலமாத்தூர் கிராமத்தை சேர்ந்த வினேத்குமார் என்று கூறியுள்ளார். மேலும் தான் சோளவியாபாரம் செய்து வருவதாகவும், சோளம் விற்ற பணத்தை எடுத்து வருவதாகவும் கூறியுள்ளார்.

ஆனால் அதற்கான ஆவணங்கள் எதுவும் அவரிடம் இல்லை.இதனையடுத்து திருச்சி வருமான வரிதுறை இணை இயக்குனர் ஸ்வேதா தலைமையிலான அலுவலர்கள், அரியலூர் ரயில்வே காவல் நிலையத்திற்கு வந்து பிடிபட்ட வினோத்திடம் விசாரணை மேற்கொண்டனர்.

வினோத் திடம் அவர்கள் நடத்திய விசாரணையில் ஹவாலா பணப்பரிமாற்றத்திற்கு இந்த பணம் கொண்டுவரப்பட்டது என்பது விசாரணைக்கு பிறகு தெரியவந்துள்ளது. இதன் பின்னர் வினோத் மீது ஹவாலா பணப்பரிமாற்ற வழக்கு பதிவு செய்து அவரையும் பறிமுதல் செய்யப்பட்ட 77 லட்சத்து 11 ஆயிரத்து 640 ரூபாயையும் கைப்பற்றி திருச்சி வரித்துறை அலுவலகத்திற்கு அழைத்து சென்று விசாரணை நடத்தி வருகின்றனர்.

Share this to your Friends

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *