நீட் தேர்வை ரத்து செய்யக்கோரியும் டில்லியில் போராடி வரும் மாணவர் கள் மீது தாக்குதல் நடத்திய காவல் துறையைக் கண்டித்தும், மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் பதவி விலக வலியுறுத்தி யும் மதுரையில் இந்திய மாணவர் சங்கம், ஜனநாயக வாலிபர் சங்கம், மாதர் சங்கம் உள்ளிட்ட அமைப்புகளை சேர்ந்த சுமார் 100-க்கும் மேற்பட்டோர் செங்கோட்டையில் இருந்து மதுரை வந்த ரயிலை திருப்பரங்குன்றத்தில் மறித்து தண்டவாளத்தில் அமர்ந்து ரயில் போராட்டத்தில் ஈடுபட்டனர்.


ரயில் மறியலில் ஈடுபட்டவர்களை போலீசார் குண்டு கட்டாக தூக்கி கைது செய்தனர். இதனால் திருப்பரங்குன்றம் ரயில் நிலையத்தில் பரபரப்பு ஏற்பட்டது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *