தூத்துக்குடி முதல் திருச்செந்தூர் வரை செல்லும் சாலைகள் பல வருடங்களாக வாகனங்கள் செல்ல முடியாத நிலைமையில் கொண்டும் குண்டும் குழியுமாக சாலைகள் உள்ளது

இதனால் வாகனத்தில் செல்பவர்கள் மிகவும் சிரமம் அடைகின்றனர் அது போல தூத்துக்குடி முதல் ராமேஸ்வரம் வரை செல்லும் கடற்கரை சாலை ரோடும் மிகவும் மோசமாக உள்ளது இந்த நிலையில் தமிழக வெற்றிக்கழக தூத்துக்குடி மாநகர கழகத்தின் சார்பில் முன்னாள் நகர் மன்ற உறுப்பினர் ஆனந்தகுமார் தலைமையில் நெடுஞ்சாலை துறை அதிகாரியிடம் கோரிக்கை முன் அளித்தனர்

வாகனங்கள் செல்ல முடியாத நிலைமையில் உள்ள சாலையை உடனடியாக சரி செய்ய வேண்டும் இல்லை என்றால் தமிழக வெற்றி கழகத்தின் சார்பில் மாபெரும் ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என்று தமிழக வெற்றிக்கழக தூத்துக்குடி மாநகர நிர்வாகி ஆனந்தகுமார் தெரிவித்துள்ளார் உடன் தமிழக வெற்றிக்கழக நிர்வாகிகள் சென்றனர்

Share this to your Friends